பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 । பொந்திலியர் கன்ஞர் வீரமுஷ்டிகள் செம்படவர் குயவர் சக்கிலியர் பண்டாரங்கள் - கைக்கோளர் தமிழ் செட்டிகள் கல்தச்சர் சேணியர் கருமார் கணக்கர் சாத்தானியர் தச்சர் அம்பட்டர் வலங்கை, இடங்கை என்னும் வலது பக்கம், இடது பக்கம் என்று பொருள்படும் இவ்விரண்டு பிரிவுகள் வந்ததற்குக் காரணம் தமிழரசர்கள் சபையில் அவர்கள் அரசரது ஏதிரில் உட்கார வேண்டி வந்தபொழுது, இன்னின்ன ஜாதியார் வலதுபுறமும், இன்னின்ன ஜாதி யார் இடதுபுறமும் உட்கார வேண்டுமென்று, வகுத்திருக்க வேண்டு மென்று தோன்றுகிறது. அன்றேல், புத்தத்திற்குச் செல்லுங்கால், வலதுபுறம் இருந்தே யுத்தம் செய்தவர்கள், இடதுபுறமிருந்து யுத்தம் புரிந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டிருக்கலாம். தற்காலமும் தமிழ் நாட்டில் பூர்வீக நகர்களில் ஒன்ருகிய காஞ்சீபுரத்தில், ஏகாம்பரீஸ் வரர் உற்சவத்தில் வலதுபுறம் கிற்கவேண்டிய தாசிகள் சில ஜாதியார், இடதுபுறம் நிற்கவேண்டிய தாசிகள் சில ஜாதியார், என்று வகுக்கப் பட்டிருப்பதைக் காண்க. இதில் கவனிக்க வேண்டிய விந்தையென்ன வென்ருல் கைக்கோளர் இடங்கையைச் சேர்ந்த்வர்கள், கைக்கோள தாசிகள் வலங்கையைச் சேர்ந்தவர்களாம்! இதற்குக் காரணம் தெரியவில்லை. - அர்த்தம் மாறிய தமிழ் மொழிகள் காலப்போக்கில் சில தமிழ் மொழிகள் பூர்வீக அர்த்தம் மாறி, வேறு அர்த்தத்தைக் கொடுப்பனவாயிருக்கின்றன ; அவற்றுள் சிலவற்றை ஆராய்வோம். - - - () கோயில் ஆதியில் கே-அரசர்+இல்-விடு என்று அர்த்தமுடையதாயிருந்தது: ஆதி காலத்தில் இது அசர்களுடைய