பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெயர்ச் சொல் - வினைச் சொல் ஆடு=மேலும் ஆடு = கடி கொள்=ஒர்வகை தானியம் கொள்க வாங்கு வில்=தனுசு வில்= விற்பனைசெய் கார்= மேகம் கார்=காப்பாற்று செல்= கரையான் செல் = போ வரை=மலை வரை = எழுது தமிழ் பாஷையில்இரண்டு ரகரங்கள் உண்டு. இடையின ரகரம் (ர) வல்லின றகரம் (ற) சமஸ்கிருதம் ஆங்கிலம் முதலிய பாஷை களில் இப்பேதமில்லை. தமிழ் பாஷையின் தத்துவத்தை யறியாதவர் கள் இரண்டு ர கரங்கள் இருப்பானேன், என்று கேட்கின்றனர். தமிழ் மொழிகளைஎழுதும்பொழுது மாணவர்கள் இவ்விரண்டுரகரங்களுக்கும் உள்ள பேதத்தை அறியாமல் சொற் பிழைகள் அதிகமாய் எழுது கின்றனர். இடையின ரகரம் ஒரு மொழியிலிருந்தால் அதற்கு ஒரு பொருளும் அதே உச்சரிப்பையுடைய மொழியில், வல்லின றகரம் இருந்தால் வேறு பொருளும் தருவதாம் உதாரணமாக - அரை - பாதி அறை சிற்றில், அறை என்ரேவல் உரம் மார்பு உறம் உறுதி ஏராளர் உழவோர் ஏருளர் படை வீரர் கரை ஒரம் கறை களங்கம் குரவர் ஆசாரியர் குறவர் - ஒர் ஜாதியார் குரவை ஒர் கூத்து குறவை ஓர் வகை மீன் . இங்ங்னமெ தமிழ் பாஷையில், தந்நகரம் என்றும் நன்னகரம் என்றும் இரண்டு எழுத்துக்கள் உள. இவைகளின் வித்தியாசம் தெரி யாது தமிழ் மாணவர்கள், எழுதுங்கால் பல பிழைகள் இழைக்கின்ற