இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை
தமிழ் அமுதம் என்னும் பெயர்கொண்ட இந்நூல் பத்துக் கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டது. இவற்றுள் பல கட்டுரைகள் தமிழ் நூல்களை ஆராய்ந்து எழுதப் பெற்றவை. இக்கட்டுரைகள் தமிழ் ஆர்வமுடைய அனைவருக்கும் பெரிதும் பயன்படுவன வாகும். இலக்கியம், வரலாறு, கல்வெட்டு இவைகொண்டு ஆராய்ந்து வரையப் பெற்றுள்ள இக்கட்டுரைகள் தமிழர் அனைவருக்கும் பயன்படும் என்பது எனது நம்பிக்கை.
இதனை நன்முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள வள்ளுவர் பண்ணை உரிமையாளருக்கு எனது நன்றி உரியது.
தியாகராசர் கல்லூரி, | |
மதுரை. |
மா. இராசமாணிக்கம்,