பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

23

விட்டாய்? மாதங்கம் பரிசிலாகக் கிடைத்து விடுவது அவ்வளவு எளிதா என்ன?

(மாதங்கம் யானையென்றும் பெரிய பொன் என்றும் பொருள்படும்)

பாடினி : (சிரித்துக்கொண்டே அடடே! மாதங்கமா? இனி நமக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லுங்கள். அவ்வளவு தங்கமிருந்தால் வேறு என்ன குறை?

பாணன் : (கடுகடுப்பான நோக்குடன்) மறுபடியும் மறுபடியும் வம்பு செய்கிறாயே! நான், கிடைத்த பரிசில் ‘வேழம்’ என்று சொல்லுகிறேன். நீ என்னவோ புரியாமல் பேசுகிறாயே!

(வேழம் = கரும்பு, யானை என்று இரு பொருளுக்கும் உரிய சொல்)

பாடினி: (ஆச்சரியப்பட்டவள் போன்ற குறிப்புடன்) ‘வேழமா! நன்றாகக் கடித்து இனிய சாற்றை உறிஞ்சலாமே?’

பாணன் : நாசமாய்ப் போயிற்றுப் போ! நான் ‘பகடு’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.நீ என்னடா என்றால்..?

(பகடு - எருது, யானை என்ற இரு பொருள்களும் தரும்)

பாடினி : (இடைமறித்து) பகடா? ஏறில் கட்டி நிலத்தை உழலாமே- நல்லதாய்ப் போயிற்று!

பாணன் : இந்தா! சும்மா ஆளைப் பைத்தியம் ஆக்கிவிடப் பார்க்காதே! நான் சொல்லியது'கம்பமா’ தான் நமக்குக் கிடைத்த பரிசில் என்பதையே அன்றி வேறு ஒன்றும் இல்லை!

(கம்பமா= கம்பத்தில் கட்டப்படும் விலங்காகிய யானை, கம்பு என்ற தானியத்தின் மாவு)

பாடினி: கம்பமா! களி கிளறிச் சாப்பிடலாமே? அந்தக் கம்ப மாவு தானே?...சாப்பிடச் சுவையாயிருக்குமே! (சிரிப்பை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு சொல்லுகிறாள்)