பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் இலக்கியக் கதைகள்

ஞாயம் = நியாயம்

என்று குருடர் பாடத்தொடங்கவும், பசி வேதனை பொறுக்க முடியாத நொண்டியான மற்றொருவர்,

—போங்காணும்!
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார் சொல்?”

தோல் முரசு = தோல் போர்த்த முரசு.

என்று வார்த்தைகளை அள்ளி ஆத்திரத்தோடு தெளித்தார். கூட்டத்தோடு கூட்டமாகச் “சுவாமியைப் பின்பற்றிச் செல்லும் அத்தனை பேரில் கொட்டும் மேளமும் கேட்டவரின்றிச் சோற்றைக் கண்டவர் யார்?’ என்று கேட்டுப் பசி நேரத்திலும் அந்தக் குறும்புத்தனமான காரியத்தால் கொஞ்சம் மனமகிழ்ச்சி அடைந்தார் முடவர். குருடர் கூற்றில் இரக்கம் தொனிக்கிறது. முடவர் கூற்றிலோ வயிற்றுப் பசியையும் மறந்த பரிகாசம் தொனிக்கிறது. பாடுவது அவர்களுக்குப் பொழுதுபோக்கு, பசியால் மட்டும் அது நின்றுவிடுமா என்ன?

22. கொடுப்பவர் பெருமை

கொடையின் பயன்தான் கேட்டுப் பெறுகின்றவர்களுக்கு உரியது. கொடையின் பெருமை, கொடுப்பவர்களுக்கு மட்டுமே உரியது. உதவி நாடி வந்து கேட்கின்றவர்கள் எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்வார்கள். கொடுக்கப்பட்ட பொருளை உயர்வு தாழ்வு ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். “தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பதா?” என்று ஒரு பழமொழி கூட உண்டு.ஆனால் கொடுக்கின்றவன் தான் தராதரம் அறிந்து தன்னுடைய தகுதியையும் கேட்கின்றவருடைய தகுதியையும் சீர்தூக்கி நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் கொடுப்பவனுடைய தகுதியின் உயர்வு-தாழ்வு கொடுக்கின்ற கொடையின் தரத்தையே பொறுத்ததாக இருக்கிறது!