பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேணுகோபாலப் பிள்ளை

652

வேலாயுத முதலியார்


பித்து வெளியிடுவதில் வல்லுவர். இவர் நச்சினார்க்கினியர் சொல்லதிகாரம், இறையனார்களவியல் போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அம்பலவாணன் என்னும் நவீனத்தையும் எழுதியவர். மாணவ உலகிற்குப் பல உரை நடை நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் துருவன், திருக்கண்ணபிரானார் குறிப்பிடத்தக்கவை. கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

வேலாயுத முதலியார்

தொழுவூர் என்னும் ஊரினர். இவர் சென்னை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். இராமலிங்கசுவாமிகளின் மாணவராய்த் திகழ்ந்தவர். அவரது வரலாற்றையும் எழுதியவர். சிறந்த இலக்கணப் புலவர். திருவெண் காட்டடிகள் வரலாற்றை எழுதியவர். கி.பி.19 ஆம் நூற்றாண்டு.