பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ
பாடாத தேனிக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்தது உண்டா'

இப்பாடல் கைம்மைத் துயரைக் காட்டுவதாகும்.

‘சித்திரச் சோலைகளே-உமைநன்கு
திருத்த இப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓ உங்கள் வேரினிலே’

இவ்வரிகள் உழைப்பாளர் உழைப்பைக் காட்டுகின்றன.


4. நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை

பாரதி தேசியக் கவிஞர், கவிமணி குழந்தைக் கவிஞர்; பாரதிதாசன் புரட்சிக் கவிஞர்; நாமக்கல்லாரோ காந்தியக் கவிஞர்.

தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே
அவற்கொருகுணமுண்டு’

என இன உணர்வு ஊட்டும் கவிதை பல அவர் பாடியுள்ளார்.

‘தமிழன் இதயம்’ ‘சங்கொலி’ ‘தமிழ்த்தேர்' முதலிய தொகுப்புகள் தமிழுணர்வை ஊட்டுவனவாகும்.

‘அவனும் அவளும்’ என்பது கவிதை வடிவில் அவர் தீட்டிய குறுங்காவியமாகும். ‘மலைக்கள்ளன்' என்பது அவரெழுதிய நாவலாகும்.

'காந்தி அஞ்சலி' என்பதிலுள்ள பாடல்கள் அவர் கவிதைக் கோட்பாட்டை விளக்குவன.

கத்தி இன்றி ரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று வருகுது

த-8