பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

ஞானசம்பந்தர் தமிழிசையால் தமிழ் பரப்பினார். தேவாரப் பாடல்கள் பண்ணோடு பாடப்பட்டன. அருகினாகிரி நாதரின் திருப்புகழ் சந்த இனிமை கொண்டது தாள அமைப்புக்குட்பட்டு அவை கோயில் தலங்களில் பாடப்படுகின்றன.

தமிழ்ப் பண் வகைகள் பிற்காலத்துக் ககுநாடக இசை எனும் மாற்றுப் பெயரைப் பெற்றது; இவ்வகையில் தெலுங்குப் பாடல்களும் இயற்றப்பட்டன. தியாகையர் கீர்த்தனைகள் இசைமின் உச்சநிலையை எட்டிப்பிடித்தன. அருணாசல கவிராயரின் இராம நாடகமும், முத்துத் தாண்டவர் பாடிய கீர்த்தனைகளும், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய நந்தனார் சரித்திரமும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாவும் இசைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன.


இருபதாம் நூற்றாண்டுகள்

பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும் பாடிய பாடல்களும் இசைப்பாடல்களாயின. பெரியசாமித் தூரன். உளுந்துார்ப்பேட்டை சண்முகம், மின்னூர் சீனுவாசன் முதலியோர் இசைத் தமிழுக்கு ஆக்கம் தேடினர். திரைப்படப் பாடல்கள் புதிய மெட்டுகளையும், ஒலியமைப்புகளையும், கருத்துப் புரட்சிகளையும் கொண்டு விளங்குகின்றன. கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன், குயிலன், வாலி, சுரதா, புலமைப்பித்தன், கங்கை அமரன், காமராசன், வைரமுத்து முதலியவர்களின் பாடல்கள் திரையரங்கில் ஒலித்து மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன.


நாடக இலக்கியங்கள்

இயல், இசை, நாடகம் எனத் தமிழ் முத்தமிழாக