பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'சங்கத் தமிழ் மூன்றும் தா'- அவ்வையார்.
'தலைச்சங்கப் புலவனார் தம்முன்'- மாணிக்க வாசகர்;
'சங்க முகத்தமிழ்; சங்க மலிதிகழ்'-- திருமங்கையாழ்வார்.


கல்வெட்டுச் சான்றுகள்

கல்வெட்டுகளும் சங்கம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. சின்னமனூர்ச் செப்பேட்டில் அதுபற்றிக் குறிப்பு ஒன்று கிடைக்கிறது. அதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு என்பர்.

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும்,
மதுராபுரிச் சங்கம் வைந்தும்'- செப்பேட்டு வரிகள்

இச்சான்றுகள் சங்கம் இருந்தது என்பதனை வற்புறுத்துவனவேயாயினும், சங்க இலக்கியங்களில் அது பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் கி. மு 300-க்கு முற்பட்டதாகும். காப்பியர் என்பது ஒருவகைக் குடிப்பெயர், அதுவே அவர் இயற்பெயராக மருவிவிட்டது. தொல் என்பது அடை மொழியாகும் தொல்காப்பியர் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக் களத்தில் இருந்தவர். கபாடபுரம் பாண்டியர் தலை நகரமாக விளங்கிற்று. அதங்கோட்டு ஆசான் என்னும் பெரும்புலவர் தலைமையில் இவர் தம் நூலை அரங்கேற்றினார் எனப் பாயிரம் கூறுகிறது.