பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

'ஈங்கு வருதி யிருங்கழித் தண்சேர்ப்ப!
பொங்கு திரையுதைப்பப் போந்தொழிந்த - சங்கு
நான்றுயிர்த்த நித்தில நள்ளிருள்கால் சீக்கும்
வரன் றுயிர்த்த பாக்கத்து வந்து'

11. திருக்குறள்

இதன் ஆசிரியர் திருவள்ளுவர், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுப்புகளைக் கொண்டது. 1330 குறள்களையும், 133 அதிகாரங்களையும் உடையது; குறள் வெண்பாவால் இயன்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது இதன் தனிப் பண்பாகும். குறிக்கோள் மிக்க வாழ்க்கையை இது வலியுறுத்துகிறது.

அறத்துப்பால்

அறத்தில் திருவள்ளுவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தாய் பசித்தாலும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக்கூடாது என்பது அவர் கோட்பாடு.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை'

அன்பே அறத்தின் இயக்கம் என்பது அவர் கொள்கையாகும்.

‘ அன்பின் வழியது உயிர் நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

ஈந்து இசைபட வாழ்தலே வாழ்க்கையின் குறிக்கோள்: என்பர்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு'