பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191


தாகத் தோன்றவில்லை. ஒன்பது + பத்து என்னும் சொற்புணர்ச்சியில், ஒன்பது என்பது தொண்’ என்றும் பத்து என்பது நூறு” என்றும் மாறித் ‘தொண்ணுறு என்னும் சொல் உருவானதாகவும், ‘ஒன்பது + நூறு’ என்னும் சொற் புணர்ச்சியில், ‘ஒன்பது’ என்பது தொள்’ என்றும் நூறு’ என்பது ஆயிரம்’ என்றும் மாறித்தொள்ளாயிரம்’ என்னும் சொல் உருவானதாகவும் கூறுவதை எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும்? இங் த ப் பொருந்தாக் கூற்றை,

‘ ‘ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி யாய்த பகரங்கெட கிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்’.

‘ஒன்பான் முதனிலே முந்துகிளங் தற்றே முந்தை யொற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகாரம் ஒற்றும்’. என்னும் தொல்காப்பிய நூற்பாக்களாலும்,

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல் - கி0. 2 “. . . . . . . .” 58.