பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193


பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கறவே, தொண்பது என்னும் பத்தாமிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும், தொண் ணுாறு என்னும் நூருமிடப்பெயர் பத்தாமிடத்திற் கும், தொள்ளாயிரம் என்னும் ஆயிரத்தாமிடப் பெயர் நூருமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன. தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப் பெயர் நூருமிடத்திற்கு வழங்கவே9000 என்னும் எண்ணேக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என் னும் பெயரைச் சேர்க்கவேண்டியதாயிற்று. முதல் பத்து எண்ணுப்பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர, மற்றவையெல்லாம் ஒரு சொல்லாயிருப்பதை யும், ஒன்பது என்பது இரு சொல்லாயிப் பது (பத்து) என்று முடிவதையும், தொண்ணுாறு என் பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் கோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருங்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணுாறு தொள்ளாயிரம் என்பவற்றிற்கும் அப்பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரை யென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது, தொண்டு - நூறு = தொண்னு று, தொண்டு - ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர் ப்ப .ே த முறையென்றும், தொண்டு என்னும் எண் ணுப் பெயர் வழக்கற்றதினுல் அதன் மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்து வந்து வழங் கின என்றும் அறிந்துகொள்க’.