பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201


சொல்லப்பட்டு மேலும் சுவையளிக்கிறது. இவ்வா றெல்லாம் சொற்களே-சொற்றாெடர்களைச் சுவை பெறச் சொல்லியாள்வது ஒருவகை மக்கள் மரபு. ஒரு பெரிய எண்ணிலிருந்து ஒன்று குறைந்தால் ‘ஒன்று குறைந்த இத்தனே’ என்று கூறும் மரபு புலவர்களிடையேயும் உ ண் டு. நன்னூலாசிரியர் பவணந்தியார் சார்பெழுத்தின் விரியைச் சொல்ல வந்தவிடத்தில், .ெ மா த் த ம் ‘முந்நூற் றறுபத் தொன்பது’ (869) என்று கூற வேண்டியவர் அங்ஙனம் கூருமல், ‘ஒன்று குறைந்த முந்நூற் றெழுபது (370-1=869) என்று கூறியுள்ளார். இதனை நன்னூலி லுள்ள

  • "உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராயிதம் எட்டுயி ரளபெழு மூன்றாெற் றளபெடை ஆறே முஃகு மிம்முப் பானேழ் உகர மாரு றைகான் மூன்றே ஒளகா னென்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றாெழி முந்நூற் றெழுபா னென்ப” என்னும் நூற்பாவின் இறுதி யடியா லறியலாம். ‘ஒன்று ஒழி முந்நூற்று எழுபான்’ என்றால், ஒன்று குறைந்த முந்நூற்று எழுபது அதாவது முக் நூற்று அறுபத்தொன்பது’ என்பது பொருள். இது போலவே, ஒன்பது என்னும் எண்ணே, ஒன்று குறைந்த பத்து என்னும் பொருளில், ஒன்று ஊன மான பத்து'-'ஒன்று ஊனப் பத்து’ என்றெல்லாம்
  • நன்னூல் - எழுத்ததிகாரம் - எழுத்தியல் - 6.