பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206


மக்கள் இயல்பு என்பதை ஈண்டு மீண்டும் நினைவு கூரவேண்டும். IX (10-1)= 9,XC (100-10)=90 என இலத்தீனில் இம்முறை உள்ளதாக முன்பு கூறியிருப்பவற்றையெல்லாம் இங்கே மறுபடியும் நினைவுசெய்து பார்க்கவேண்டும்.

இரண்டு பத்துக்களே இருபது என்றும் ஏழு பத்துக்களே எழுபது என்றும் கூறும் மக்கள், ஒன்பது பத்து என்பது நூறை நெருங்கிவிட்டதால், குறைந்த நூறு என்னும் பொருளில் அதனைத் தொண்ணுாறு (தொள்+நூறு) எனக் கூறுவது ஒ ரு வ ைக ச் சுவையான வழக்காருகும். இது போலவே, மூன்று நூறுகளே முந்நூறு எனவும் எட்டு நூறுகளே எண்ணுாறு எனவும் கூறும் மக்கள், ஒன்பது நூறு என்பது ஆயிரத்தை நெருங்கி விட்டதால், குறைந்த ஆயிரம் என்னும் .ெ பா ரு ளி ல் அதனைத் .ெ தா ள் ள ா யி ர ம் (தொள்-ஆயிரம்) எனக் கூறுவதும் சுவையான வழக்காறேயாகும். ஈண்டு, ஒன்பது என்பது, ஒன்று குறைந்த பத்து என்னும் பொருளில் ஒன்றுான மான பத்து’, ‘ஒன்றுானப் பத்து’ என்றெல்லாம் வழங்கப்பட்டதாக மயிலேநாதர் தெரிவித்திருப்பதை மீண்டும் நினைவு கூரவேண்டும்.

அடுத்து, ‘தொள்’ என்பதற்கு, தொளேக்கப் ப ட் ட து - துளைக்கப்பட்டது - கு ைற க் க ப் பட்டது - கு ைற வு பட் ட து - என்ற பொரு ளுண்மைக்குப் பல சான்றுகள் த ர மு. டி. யு. ம். தொள்ளுதல் என்றால் தோண்டுதல் - துளேத்தல்; தொள்ளல் - தொளை - தொள்ளே என்றால் துளை,