பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208


உண்மை யிங்ஙன மிருக்க, இப்போது புதிய ஆராய்ச்சியாளர் சிலர் தொண்ணுாறு, தொள்ளா யிரம் என்பவற்றிற்கு வேறுவகைப் பெயர்க்காரணம் கூறுகின்றனர். பெருவியப்பிற்குரிய - அதே நேரத் தில் பொருந்தாத அந்தப் பொயிக் காரணம் வருமாறு:

“பண்டைநாளில் அடிப்படை எண்கள் பத்து இருக்கவில்லை; இப்போதுள்ள ஒன்பது நீங்க்லாக மொத்தம் ஒன்பது (9) எண்களே அப்போது இருந்தன. அதாவது,

1-ஒன்று 6- ஆறு 2-இரண்டு 7-ஏழு 3-மூன்று 8-எட்டு 4-நான்கு 10-பத்து 5-ஐந்து

இவையே முன்பு நடைமுறையில் இருந்த எண்க ளாகும். இப்போதுள்ள ஒன்பது (9) எ ன் னு ம் எண்ணின் இடத்தில் அப்போது பத்து இருந்தது. இப்போது அடிப்படை எண்கள் பத்து இருப்பதால் பத்தைப் பத்தால் பெருக்கிப் பத்துப்பத்து நூறு’ (10x10=100) என்கிருேம்.அப்போது அடிப்படை எ ண் கள் ஒன்பதே இருந்ததால், ஒன்பதை ஒன்ப தால் பெருக்கினல் வரும். எண்பத்தொன்றைத்தான் (9X9=81) அப்போது நூறு என்றார்கள். அப் போது ஒன்பதின் இடத்தில் பத்து இருந்ததால், அப்போதும் பத்துப் பத்து நூறு’ (10x10=100) என்றுதான் சொல்லப்பட்டது. ஆல்ை அப்போது நூறு (100) பழங்கள் என்று சொல்லப்பட்டவற்றை