பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பகத்தார் உரை

பிறநாட்டு நல்லறிஞர்.அத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் “ - பாரதியார்.

தமிழ் இலத்தீன் பாலம் ‘ என்னும் புதுத் துறை நூல் தருகிருேம். ஓரின மொழிகட்குள்ளே “ மொழி ஒப்பியல் ‘ என்னும் புதுக்கலை அறிஞர் பெருமக்களால் தோற்றுவிக்கப் பெற்று வளர்ந்து வருகிறது. ஆல்ை, ஈரின மொழிகளாகிய தமிழுக்கும் இலத்தீனுக்கும் பாலமாக உள்ள இந்த நூலில் அந்த இருமொழி ஒப்பியல் தரப்பட்டுள்ளது. இது சார்பான விளக்கங்களை இந்நூலைத் தொடர்ந்து படிப்பவர் விரிவாக அறிவர். ஆசிரியர் சுந்தர சண்முகனரின் இந்தப் படைப்பு, இதுவரையும் வெளிவராத ஒருவகைப் புது முயற்சியே!

இந்த அரிய மொழியியல் ஆராய்ச்சி நூல் வெளியாவதற்குத் தாமாக முன்வந்து பொருளுதவி புரிந்த புரவலர், புதுவையில் பெயர் பெற்ற ம ரு ந் த க ம ா கி ய அசோக் மெடிக்கல் சு’ என்னும் பெரிய வாணிக நிறுவனத்தின் உரிமை யாளர் உயர்திரு ந. இரத்தினவேலு அவர்கள் ஆ வ ச ர். அவர்தம் உள்ளத்தின் பரப்பு விசும்பினும் பெரிது! அவர்கட்கு எவ்வளவு நன்றி செலுத்தினும் போதாது

புதுவை பிரெஞ்சு கலைக் கழகத்தின் தமிழ் - பிரெஞ்சு ஆராய்ச்சித் துறைத் தலைவராய் வீற்றிருந்து பல அரிய பெரிய பழந் தமிழ் நூற்களைப் பிரெஞ்சு மொழியில் பெயர்த்து உலகப் புகழ் .ெ ப ற் று ள் ள மொழியாக்கச் செல்வர் உயர்திரு ரா. தேசிகப் பிள்ளையவர்கள் இந்த நூலுக்கு அருள்கூர்ந்து நல்ல அணிந்துரை நல்கியுள்ளார்கள். அவர்கட்கும் சால நன்றி ஆதரவளிக்க அனைவரையும் வேண்டுகிருேம்.