பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


இந்நூலேத் தரங்கம்பாடியில் பர்னல் (Burnel) என்பவர் பதிப்பித்திருக்கிறார். அமைப்பு, பிழை திருத்தம் முதலிய பதிப்பு தொடர்பான வேலைகளே “இஃலெஃபெல்டு (K. Thlefeld) என்பார் அரிதின் முயன்று செய்திருக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லீஸ் (P. W. Ellis) என்னும் அறிஞர், வீரமா முனிவரின் கையெழுத்துப்படிகளைத் து ரு வி த் தேடித் திரட்டி வைத்திருந்தார். அவரிடமிருந்து டாக்டர் பாபிங்டன் (Dr. Babington) எ ன் பார், Clavis என்னும் இந்த இலக்கண நூலின் கையெழுத் துப் படியைப் பெற்றுத் தம் நூலகத்தில் வைத் திருந்தார். அந்நூலகத்திலிருந்து பர்னல் இதனை விலக்கு வாங்கி அச்சிற் பதிப்பித்தார். 1788-ஆம் ஆண்டு வீரமாமுனிவரின் கொடுந்தமிழ் இலக்கண நூலே முதல் பதிப்பாக அச்சிட்ட தரங்கம்பாடி மாதாகோயில் அச்சகம், இந்த நூலேயும் முதல் பதிப்பாக அச்சிடும் பேற்றைப் பெற்றது. இந்தச் செய்திகளை யெல்லாம், இந்நூலின் தொடக்கத்தில் பதிப்பாசிரியர் பர்னல் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிப்புரையினல் அறியலாம். அப் பதிப்புரை நூலிலுள்ளாங்கு வருமாறு:

Preface.

Beschi’s Treatise on the so-called High Tamil and om Tamil Poetry and Rhetoric is here printed for the first time from a Manuscript corrected