பக்கம்:தமிழ் உரை நடை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் உரைநடைச -உரைநடை நாட்டில் இன்று வளர்ந்து வருகிறது என்ன லாம். சிறப்பாக அறிஞர் சிலர் உயர்ந்த வாழ்வு நலக் கருத்துக்களையும் வளர்கின்ற கலை பற்றிய கருத்துக்களே யும் நல்ல உரைநடையில் எழுதி உதவுகின்றனர். அவர் களுள் டாக்டர். மு. வரதராசனர், டாக்டர். ரா. பி. சேதுப் பிள்ளை, திருவாளர்கள். அண்ணுத்துரை, கி. வ. ஜகந்நாதன் போன்றவர்களின் பணி போற்றத்தக்கதாகும், தமிழ் நாட்டில் இன்று நூற்றுவருக்கு மேற்பட்ட நல்ல எழுத் தாளர்கள் இருக்கிருர்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக ஆராயின் நூல் விரிவடையும். எனவே, இந்த அளவோடு இன்றைய உரைநடை வளர்ச்சியைப் பற்றிய ஆய்வினை நிறுத்துவோம். இவ்வாறு தொல்காப்பியனர் காலத்துக்கு முன் தொடங்கி அமைதியாக அசை போட்டு வளர்ந்து வந்த உரைநடை, இந்த இருபதாம் நூற்ருண்டின் இடையில் பல வகைபில், பல கிலேயில், பல துறையில், பல முறையில் வளர்ந்து ஓங்கி நிற்கிறது என்னலாம். இதன் வளர்ச்சிஉரைநடையின் சிறப்பு-மேலும் மேலும் செழித்துச் சிறக்க' என வாழ்த்தி நாமும் இந்த நூலே முடிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/241&oldid=874568" இலிருந்து மீள்விக்கப்பட்டது