பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

யாகப் போவதை அறிவித்து என் இதயத்தைத் துன்புறுத்திய அதே மேளதாள வாத்ய ஒலிகளெல்லாம் இப்போது எனக்குத் தேறுதல் கூறுவதுபோல் ஒலிக்கின்றனவே !”...

“துந்துபிகளெல்லாம் தும் தும் தும் என்றும், சங்குகளெல்லாம் பம் பம் பம் என்றும், தாளவகைச் சல்லரி மல்லரி கரடிகைகளோ தீம் தீம் தீம் என்றும், முரசு, பேரிகை, மிருதங்கங்களோ தோம் தோம் தோம் என்றும் தொனிக்கின்றன. ஆகவே, இவ்வகை வாத்திய ஒலிகள் எல்லாம் ஒன்றுகூடி தும் பம் தீம் தோம், தும்பம் தீம்தோம், துன்பம் தீந்தோம், துன்பம், தீர்ந்தோம் என்னும் பொருளைக் கொடுக்கலாயின. ஆஹா! நான் செய்த பாக்கியமே பாக்கியம். ”

இந்த வசனத்தைச் சுந்தரி பேசி முடித்ததும் அந்த நாளில் சபையோர் நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். இந்த அருமையான கற்பனை ஒரே இரவில் எழுதி முடித்த ஒரு நாடகத்தில் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போது சுவாமிகளின் புலமை நன்கு புலனாகும்.

கோவலன்

சுமார் 43 ஆண்டுகளுக்குமுன் சுவாமிகளால் எழுதப்பட்ட கோவலன் நாடகம் மிகப் பிரசித்திபெற்றது. தமிழ் நடிகர்கள் அனைவரும் இந் நாடகத்தை நடித்திருக்கின்றனர். புகழ்பெற்ற இந்தக் கோவலன் நாடகத்தை இன்று புலவர்கள் சிலர் கண்டிக்கின்றனர்; குறை கூறுகின்றனர். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் பெருமை தெரியாத எவனோ ஒருவன் ‘கோவலன்’ என்ற பெயரால் ஒரு கூத்தைக் கி⚫⚫⚫ வைத்துவிட்டான் என்பது புலவர்களின் எண்ணம்.