பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix


குரல்-1, குரல்-2, குரல்-3, குரல்-4 எனப்
பின்னணிக்காக அமைத்த முறைமை
'நவீன மேடை நாடக' மரபில்
'எடுத்துரைஞர்' உத்தியை இயம்புமாப்போல
எழுத்துரு அமைப்பில் இருப்பதைக் காணலாம்.
நாடகத்தமிழில் வைத்த இந்த ஈடுபாடே,
'சிறு வயது முதல் (24) நாடகத்தில் ஈடுபட்டு
ஐம்பத்தைந்து வயதிற்குள் (1867-1922),
நாற்பத்தெட்டு நாடகங்களை இயற்றி மேடையேற்றிய சங்கரதாச சுவாமிகள்' செயலில் மதிப்பு வைத்து -
அவர் நினைவுச் சொற்பொழிவில் பங்கு பெற்று
'தமிழ் நாடக வரலாறு' பற்றியும்
'சங்கரதாச சுவாமிகள்' பற்றியும்
எடுத்தோத வைத்ததென்றே
எண்ணத் தோன்றுகிறது.
இந்தச் சொற்பெருக்கை,
1971ஆம் ஆண்டிலேயே-
மதுரைப் பல்கலைக் கழகத்தில்-
ஐயா நிறைத்திருந்தார்.
ஆனால்,
ஐயாவின் துறையோ பின் 'இயலா'க அமைந்ததால் அக்கறை இன்றியே பூட்டப்பட்டிருந்தது.
இரு மாதம் முன்னே...... . .
வேறுலகை நோக்கி ஐயா விரைய,
இருப்பவை பலதையும் எடுக்கத் தொடங்கினோம்.
ஐயாவின் இளைய மகள் மீரா அவர்கள்