பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



X


சேர்த்து வைத்தவற்றை வெளியில் கொணர்ந்தார்.
தூசு மூடிய சுவடிகள் போல
இருந்த அவற்றைத் துவட்டிப் படித்தோம்.
முதலில் கிடைத்த முத்துப் போல
'முத்தமிழ் நாடகச் சங்கதி' கிடைத்தது.
சிலப்பதிகார 'அரங்கேற்று காதை'யும்
அடியார்க்கு நல்லார் வகுத்த உரையும்
தொல்காப்பியத்தின் 'மெய்ப்பாட்'டியல்புகள்
நாடக வழக்கில் விரிந்த முறையும்
ஐயாவின் பிரதியில் உயிர்ப்புடன் இருந்தன.
இந்த இடத்தில்
இன்னொன்றைச் சொல்லலாம்.
நாடகம் தெரிந்த நண்பர்களுடனே
பேசும் போதில் ஒன்றைப் புகல்வார். .
'சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை,
நாட்டியத்தூடு நாடகம் விளைக்கும்
பத்மா சுப்பிரமணியத் தோடிணைந்து
உருப்படியாக ஆக்க விழைந்தேன்;
கூறுமிடங்களில் கூறியும் பார்த்தேன்.
அங்கீகாரம் கிடைத்த போதும்
அனுசரணைகள் கிடைக்கப் பெறாமையால்
எடுத்த முயற்சியை விட்டே விட்டேன்.'
என்றபடியாய் ஆதங்கப்பட்டுக்
குமைந்து விரக்தியில் தலையை அசைப்பார்.
அரங்கேற்று காதையைக்
'களப்படுத்தி' ஆற்றுகின்ற