பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xi

அந்தமுயற்சி வெற்றிபெற்றிருந்தால்....
கவலை முகம் காட்டுகின்ற
இருதமிழில் ஒருதமிழ்,
பழமையிலிருந்து புதுமையைப் பார்த்து
புன்சிரிப்பொன்றை உதிர்த்திருக்கக்கூடும்!
சிலவேளை,
முத்தமிழ்கூட ஒருபடி உயர்ந்து,
மற்றவரைப் பார்த்து மகிழ்ந்துமிருக்கலாம்!

ஏனெனின்,
முன்சொன்ன இருவரும்,
முத்தமிழும் உணர்ந்தவர்கள்.
ஆளுக்கொன்றாய்
இருதமிழில் வல்லவர்கள்.

காலக்கருமி,
ஈயவில்லை எனமறப்போம்.

ஆனாலும் ஐயாவின்
‘தமிழ் நாடக வரலாற்று’க் கட்டுரை
காலத்தை மீறி எமக்குக் கிடைத்தசொத்து.

இதேபோல்தான்,
சங்கரதாஸ் சுவாமிகள்பற்றிய உரையும்
அறியாத நுணுக்கங்களை அறிவுறுத்தல் செய்கிறது.
நாடக உலகிற்குள் நுழைவோர்க்கு மட்டுமின்றித்
தமிழில் விருப்புக்கொண்ட எவர்க்காய் இருந்தாலும்
சங்கரதாஸ் சுவாமிகள் ஆற்றிய செயல்நெறியை
எடுத்தோதி, இயங்கவைக்கும் துணிவையும் தருகிறது.