இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78
அ.ச. ஞானசம்பந்தன்
காந்தன்தளி என்ற ஊரில் அவர் பாடிய பாடல் வருமாறு:
- திங்கள் தங்கு சடைகள் மேலோர்
- திரைகள் வந்து புரள வீசும்
- கங்கை யாளேல் வாய்தி றவ்வாள்
- கணப திய்யேல் வயிறு தாரி
- அங்கை வேலோன் குமரன் பிள்ளை
- தேவி யார்கொற் றட்டி யாளார்
- உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
- ஒண காந்தன் தளியு ளீரே!(திருமுறை 7:5:2)
இப்பாடலை மனத்துட் கொண்ட சுவாமிகள் மீனாட்சியம்மையின் மேல் வஞ்சப் புகழ்ச்சியால் பாடுகின்றார்.
- மேற்குலத்து மாதாவாயோ சொல்லடி-மீனாட்சி
- வித்தாரம் நீயுரைத்தாலும் தக்காது நல்லதல்லடி-(மே)
அனுபல்லவி
- காற்பதுமம் தேடிவந்து காசினியோர் பூசித்தாலும்
- கண்டுபோற்றி இந்திராதி கண்டர் புகழ்வாசித்தாலும்-(மே)
சரணம்
- ஆட்டிடையன் அண்ணன் நாதன்
- கோட்டி கொண்டிட்ட வலையன்
- ஆசைமகனுங் குறவனல்லவோ-உன்றன்
- அந்தரங்கமான நிந்தைபழி நானறிவேன்
- ஊமையன் பிள்ளைத்தமிழ் உன்மீது பாடி மேன்மையாய்
- உயர்த்திப் புகழ்ந்ததும் உபசாரமே-நேரில்
- உற்றிடுங் கர்மத்தால் ஜாதி
- ஜென்மத்தால் ஜாதியில் லையென்