தமிழ் நாடக வரலாறு 18i
பாடல்-பூமி பாலகதாஸ். பாடியவர். எஸ்.விஸ்வநாததாஸ்
ஆங்கிலப் பேய்கெளெல்லாம் திரண்டு கொண்டாடுது
லண்டனிலே
ஓங்கும் சுயாட்சிப் படைகண்டு திமிர்வெறி ஏறுது
மண்டையிலே (ஆங்)
டயரென்ற பேர்படைத்த ஒரு பேய் டம்பமாய்ப்
பேசுதங்கே
( FiRE") பயரென்ற உத்திரவை சர்ச்சில்பேய்ப்
போட்டுமிரட்டு திங்கே (ஆங்)
லாயிட்ஜார்ஜ் எனும் ஒருபேய்
லண்டனை ஆட்டிப் படைக்குதங்கே பாரெட்டுத் திக்கும் போற்றும்
மகாத்மாவைப் பார்த்து நடுங்குதிங்கே வந்தே மாதரமென்னும் பேரொலி
வானைப் பிளக்குது பார் அந்த மந்திரத்தைக் கேட்டு வெள்ளைப் பேய்
மருண்டு நடுங்குதுபார் (ஆங்)
திரு எஸ். எஸ். விஸ்வநாததாஸ், அவர்கள் பாடிய மற்றொரு பாடல்.
இராகம் : வசந்தா தாளம் : ஆதி
கதர்க் கப்பல் கொடி தோணுதே கரம் சந்த்ர மோகனதாஸ்
காந்தி இந்தியா சுதேச (கதர்) அதற்கப்பால் ஞானஹாசம் அதிலே பாரதவாசம் இதற்குள் ஜீவப்ரகாசம் இனி நமக்கு சந்தோஷம் (கதர்)
மானிடச் சிப்பிக்குள்ளே மகாத்மா ஒர் முத்துப் போல ஞானவடிவம் கொண்டு நமைக் காக்க வந்ததாலே
(கதர்)