பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் பயிற்றும் முறை

யில் ஒரு கடமையை நிறைவேற்றும்பொழுது கடமை திறமையாக முடிவடைவதுடன், நிறைவேற்றுவதில் ஓர் இன்பத்தையும் பெற முடிகின்றது. விளையாட்டு முறை உற்சாகமற்ற வேலையையும் உற்சாகத்துடன் செய்வ: தற்கு ஒருவித மனப்பான்மையைத் தருகின்றது.

விளையாட்டு முறையின் தோற்றம் : விளையாட்டு முறை" என்பது ஆங்கில நாட்டுக் கல்வி நிபுணரான கால்டுவெல் குக் என்பாரால் முதன்முதல் கையாளப் பெற்றது. ஆங்கிலம் கற்பித்ததில் அவர் இம்முறையை முதன் முதலாகப் பயன்படுத்தினர். ஆங்கில இலக்கியங்களைக் கற்பதில் வெறுப்பையும் மனமின்மையையும் மாணுக்கர் களிடம் கண்ட அந்த அறிஞர் தம் முறையினுல் அவற்றை நீக்கி அவர்கள் இலக்கியங்களே ஆர்வத்துடன் கற்கும்படி செய்தார். அதுகாறும் செகப்பிரியரின் நாடகங்களிலுள்ள சொற்ருெடர்களின் பொருள்களும் ஆர்வமின்றி அறிந்து கொள்ளப்பெருமல் மனப்பாடம் செய்யப் பெற்று வந்தன. இம்முறைப்படி அந் நாடகங்கள் இலக்கியப் பாட வேளை களில் நடிக்கப்பெற்றன. மாணுக்கர்கள் வெட்ட வெளியில் நாடக அரங்கொன்றைச் சமைத்து நா ட க ங் க ளே நெட்டுருச் செய்து நடித்தனர். இலக்கியத்திற்குப் புதிய பொருள் துலங்கிற்று; பாடங்கள் விளையாட்டாக மாறின. இம்மாதிரியே இலக்கணம் கட்டுரை வரைதல் ஆகிய பாடங்களிலும் புதிய உணர்ச்சி ஊடுருவிச் செல்லத் தொடங்கியது. பாடங்களேத் தம் ஆற்றலுக்கு ஏற்றவாறும் விருப்பத்திற்கேற்றவாறும் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் கொடுக்கப்பட்டவுடனே, ஆங்கிலப் பாடத்தில் ஒரு வியத்தகு முன்னேற்றம் காணப்பெற்றது. எனவே, கால்டுவெல் குக், தேர்ச்சியும் கல்வியும் படிப்பதனுலும் கேட்பதாலும் எய்துவன அல்ல என்றும், அவற்றைச் செய்கையாலும் பட்டறிவாலும் மட்டிலுமே அடைய முடியும் என்றும் நம்பினர். கட்டாயத்தால் செய்ய முடியாத கடமைகளையெல்லாம் உற்சாகம் கலந்த முயற்சியால் நிறைவேற்ற முடியும் என்று கருதினர். விளையாட்டினுல்