பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 98

படங்களால் விளக்கம் தரப்பெற்று ஏராளமாக வெளி வந்துள்ளன ; வெளிவந்துகொண்டுமிருக்கின்றன. தமிழில் அம்மாதிரி நூல்கள் இனித்தான் வெளிவரவேண்டும்.* நல்ல நூல்களே எழுதுவதற்கும் ஆட்கள் இல்லை ; எழுதிலுைம் வெளியிடுவோர் அவற்றைப் பதிப்பிக்க முன்வருவதில்லை. எழுதுவோரும் வெளியிடுவோரும் கல்வியைப்பற்றி நல்ல கருத்துக்களே அறிந்திருந்தால்தான், இத்துறை நன்முறையில் வளரமுடியும்.

(4) படித்தவற்றை மாணுக்கர்கள் கலந்து பேசு. வதற்கும், வெளியிடுவதற்கும், பிற முறைகளில் உடனே பயன்படுத்துவதற்கும் பள்ளியில் வாய்ப்புக்களே ஏற்படுத்த வேண்டும். இவ்வித வாய்ப்புக்களில்ை இயல்பாகப்படிக்கும் மாணுக்கர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டு இன்னும் அதிக மாகப் படிக்க முனைவர் ; படிப்பதில் நாட்டம் செலுத்தா மாணுக்கர்களும் அதில் நாட்டம் செலுத்த இடம் உண்டு. இலக்கியக் கழகங்கள், பிற கழகங்கள், பள்ளி இதழ்கள், செய்திகள் தருதல் போன்ற துறைகளில் வாய்ப்புக்களே ஏற்படுத்தலாம். தவிர, வானுெலியில் பல கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவதைப்போலவே பள்ளிகளிலும் அவ்வித நிகழ்ச்சிகளே ஏற்படுத்தி ஒரு திட்டப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் அவற்றை ஒலி பெருக்கியின் மூலம் ஒலி பரப்பலாம் ; எல்லா மாணுக்கர்களும் அவரவர்கள் வகுப்பு, அறைகளிலிருந்து கொண்டும், விளையாடும் திடல், பூந்தோட்டங்கள் ஆகிய இடங்களிலிருந்துகொண்டும் இவற்றைக் கேட்கும்படித் தூண்டலாம். ஒன்றிலும் கட்டாய முறையே கூடாது. குடிமைப் பயிற்சித் திட்டம் நடைமுறை யில் உள்ள இந்நாளில் மாணுக்கர்கள் இந்நிகழ்ச்சிகளைச் செவிமடுக்கும்பொழுது வகுப்பு மாணுக்கத் தலைவர்களைக் கொண்டே நல்ல அமைதியை நிலவச் செய்யலாம். படித்தவற்றை எத்துறையிலாயினும் உடனுக்குடன் பயன்படுத்

  • இந்நூலாசிரியர் தமிழில் எழுதியுள்ள இத்தகைய அறிவியல் நூல்கள் கழக வாயிலாக வெளிவந்துகொண்ட இள்ளன.