37.8 தமிழ் பயிற்றும் முறை
வேறு சில எடுத்துக்காட்டுகள் :
(அ) முக்கியமாக, பன்மையைக் குறிக்கும் கள்’ விகுதியைச் சொல்லோடு சேர்த்தே எழுதுதல் வேண்டும் ; பிரித்து எழுதுதல் கூடாது.
இந்தியப் பிரயாணிகள் சாப்பிடும் இடம் என்று எழுத வேண்டுவதனை, .
இந்தியப் பிரயாணி கள் சாப்பிடும் இடம் என்று பிரித்தெழுதின் அது மாருன பொருள் கொடுக்கும் என்பது புலனுகின்ற தன்ருே ?
(ஆ) தொகைநிலைச் சொற்களைச் சேர்த்தெழுதுதல் வேண்டும்.
மாவிலை சேவடி
நாவுரி கோவில்
பூவரசு கடைவாய் கொடிமரம் மிதியடி இடைவேளை பொரியுருண்டை
இவைபோல்வனவற்றைப் பிரித்தெழுதின் வேறு பொருள் தந்துவிடும்.
(இ) துணைவினைச் சொற்களைச் சேர்த்தெழுத வேண்டும்.
" அவர் கோவிலில் திருவலகிடுதல், திருவிளக்கேற்றுதல் முதலிய திருப்பணிகளைச் செய்துவந்தார் ’
செய்துவந்தார் என்று சேர்த்து எழுதின், ' நாள்தோறும் வழக்கமாகச் செய்தார்’ என்று பொருள்படும். அதனையே,
கோவிலில்.........செய்து வந்தார் என்று பிரித்தெழுதின், திருப்பணிகளைச் செய்துவிட்டு வெளியே வந்தார் என்று பொருள் பயக்கும். வந்தார்’ என்பது இங்குத் துணைவினையாகலின் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.