பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 465

அறியச் செய்வதால் பயன் இல்லை ’-இதை மொழியாசிரியர்கள் என்றும் நினைவிலிருத்த வேண்டும்.

கவிதையை விளக்கும் முறை : “ கவிதைக்கு எவ்வாறு விளக்கந் தருவது ?’ என்ற விஞ கற்பிக்கும் பணியில் புகும் நிலையிலுள்ள இளம் ஆசிரியர்களிடையே எழுதல் இயற்கை. இந்த நூலாசிரியரைப் பொறுத்தவரை கவிதைக்கு விளக்கம் தருவதற்கு எவ்விதத் திட்டமான முறையும் இல்லை. பேராசிரியர் ஹாடோவின் கருத்துப்படி கவிதை கற்பித்தல் காதல் புரிதலே ஒத்தது. காதல் புரிவதில் முறையொன்று இருக்க முடியுமா ? என்ற வினவிற்கு என்ன விடையோ அதைத்தான் கவிதைக்கு விளக்கந் தருவதற்கும் வைத்துக் கொள்ளவேண்டும். விளக்கந் தருவதில் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றுகின்ற முறையில்தான் , விளக்கந் தருதல் வேண்டும். என்ருலும், ஒரு சில குறிப்புக்களே ஈண்டு எடுத்துக் காட்டலாம். ஆனல், குறிப்புக்களைக் கையாளும்பொழுது, கற்பிக்கும் வகுப்பு, கற்பிக்கவேண்டிய பாடல் ஆகியவற்றிற்கேற்றவாறும், கற்பிக்கும் ஆசிரியரின் அறிவுநிலை, மனப்பான்மைக் கேற்றவாறும் மாறுபடத்தான் செய்யும்.

கவிதையை அதற்கு ஏற்ற இசையுடன் சொற்களைப் பிரிக்காமல் சீர்பிரித்துப் படித்துக்காட்ட வேண்டும். பாட்டின் பொதுக் கருத்தை மாணுக்கர்கள் உணரும்வரை பலமுறை ஆசிரியர் படித்துக் காட்டலாம். மாணுக்கர்கள் பாடலின் கருத்தை உய்த்துணர்வதுடன் கவிதை இன்பத்தையும் சொல்நயம் பொருள் நயங்களேயும் துய்க்கவேண்டும் என்பதையும் ஆசிரியர் மனத்திலிருத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கவிதையைப்பற்றித் தமது கருத்தை மாளுக்கர்களின் மனத்தில் வலிந்து திணித்தல் கூடாது. கவிதையைப்பற்றி அவர்கள் சிந்தையில் ஒரு கருத்து உருவாவதற்கு வேண்டிய காலம் தருதல் இன்றி. யமையாதது. ஒவ்வொரு மானுக்கனும் தத்தம் மனப்பான்மைக் கேற்றவாறு கவிதையைப்பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமையை ஆசிரியர் பறித்தல்

த-31