பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 தமிழ் பயிற்றும் முறை

மரபுத் தொடரில் உருவக அணி பெரும்பாலும் காணப்படும். ஒரு மொழியிலுள்ள மரபுச் சொல்லின் கருத்தை அதனைத் தாய்மொழியாகக் கொண்டவரே எளிதில் நன்கு உணர லாகும். நன்னூலார் மரபுச் சொல்லேக் குறித்து.

“எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே

என்று நூற்பாவும் செய்துள்ளனர். எனவே, மொழியில் தொன்மையாக வழங்கிவரும் வழக்கினே அறிந்து அவ்வாறே வழங்குதல் தக்கது. தமிழ் மொழியிலுள்ள ஒரு சில மரபுச் சொற்களைப் பொருளுடன் ஈண்டு அறிவோம்.

அகடவிகடம் - தந்திரம்; அகலக்கால் வைத்தல் - வரை கடந்து போதல்; அமளி பண்ணுதல்-சச்சரவு உண்டாக்குதல் அவசரக் குடுக்கை-பதற்றக்காரன் அள்ளிக் கொட்டுதல். மிகச் சம்பாதித்தல்; ஆறப் போடுதல்-காலந் தாழ்த்தல்; ஆற்றுப் படுத்தல்-வழிச் செலுத்துதல், இடித்துரைத்தல்வற்புறுத்திக் கூறுதல்; இரண்டுங் கெட்டான்-நன்மை தீமை அறியாதவன்; இருதலை மணியன்-இரண்டு கட்சியிலும் சேர் பவன்; இழுக்கடித்தல்-அலைய வைத்தல்; ஈயோட்டுதல்-வேலை செய்யாமல் சும்மா இருத்தல்; எடுத்த எடுப்பில்-உடனே: எடுப்பார் கைப்பிள்ளை-சூதறியாதவன்; ஏட்டுச் சுரைக்காய்அனுபவத்தோடு கூடாத கல்வியறிவு; ஒருகாலில் நிற்றல்விடாப்பிடியாய் நிற்றல்; ஒட்டை வாயன்-மறையினை வெளியிடுபவன்; கங்கணம் கட்டுதல், கச்சை கட்டுதல்-ஒரு செயலே முடிக்க முனைந்து நிற்றல்; தென்காசி வழக்கு-இருதிறத்தார் கருத்துக்கும் இடைப்பட்ட நிலையில் வழக்கைத் தீர்த்தல் முதலியன.

'சென்னைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தார் வெளியிட்டுள்ள மரபுத் தொடர் அகர வரிசை என்ற சிறு நூலில் இத்தகைய மரபுச் சொற்கள் அகர வரிசைப்படி அமைக்கப் பெற்றுள்ளன. தமிழாசிரியர்கள் ஒவ்வொரு

王登 நூற்-388. 2O 'கழகத்தில்’ கிடைக்கும்.