646 தமிழ் பயிற்றும் முறை
ரங்களையும், குறிப்பாற் புலகைக்கூடிய விவரங்களேயும் சோதனைகளில் சேர்த்தல் கூடாது.
(8) சோதனைகள் ஆயத்தமாகும்பொழுதே அவற்றின் விடைகளையும் ஆயத்தம் செய்து விடுதல் வேண்டும். சோதனைகளே முதலில் ஆயத்தம் செய்துவிட்டுப் பிறகு, அவற்றின் விடைகளே அறுதியிடச் செய்யும் முறை விரும்பத்தக்கதன்று. அவ்வப்பொழுதே விடைகளை அறுதியிட்டால் சோதனைகளின் விளுக்களும் சரியான முறையில் அம்ைதல் கூடும்.
(9) சோதனைகளே நல்ல முறையில் அச்சிட்டு அமைப்பதும் அவற்றின் சிறப்புக்குப் பெருந்துணே புரிதல்கூடும். நேர்த்தியான தாள், நல்ல எழுத்துக்கள், வினுக்களே அமைக்கும் ஒழுங்குமுறை போன்ற விவரங்கள் நன்ருகக் கவனிக்கப் பெறுதல் வேண்டும். கூடியவரை விடைத் தாளின் விலப்பக்கத்திலேயே மாணுக்கர்களின் விடைக்கு இடம் அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு வகைச் சோதனைக் கும் குறிப்புக்கள் விள்க்கமாகவும் தெளிவாகவும் கருத்துடன் ஆயத்தம் செய்யப்பெற்றுச் சோதனைகளின் தொடக்கத்தில் தெளிவாக இருக்குமாறு அமைக்கவேண்டும்.
(10) சோதனைகளைத் திருத்துவதில் பயன்படக் கூடிய விதிகளையும் சோதனைகளே ஆயத்தம் செய்யும் பொழுதே வகுத்துவிட வேண்டும். விளுக்களின் தரத்திற் கேற்றவாறு மதிப்பெண்களேக் கூட்டியோ குறைத்தோ அறுதியிடுதல் சரியல்லவென்றும், ஒவ்வொரு விடைக்கும் ஒரு மதிப்பெண் வீதம் கொடுத்தலே சரியென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
நல்ல சோதனைகளின் இலக்கணம்
எந்தச் . சோதனைகளாக இருப்பினும் அவற்றைக்
கையாளுவதற்குமுன் நல்ல சோதனைகளின் எல்லா இலக்கணமும் அவற்றிற்குப் பொருந்துகின்றனவா என்று பார்த்