பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109.

கூடிய அரிய தவங்கள் எவையும் இல்லை. அவனது துணை இன்றி மும்மூர்த்திகளால் ஆகக்கூடியது எதுவும் இல்லை. ஆகவே, அச்சிவபெருமானது துணை இல்லாமல் வீடாகிய ஊரை அடையும் வழி அறியாது இருக்கின்றேன். (மங்கலத்தை அடைந்தால்தானே அமங்கலத்தை நீக்க முடியும்.)

(அ - சொ) ஒழிய தவிர்த்து. அமரர் - தேவர். மூவர்பிரம்மா, விஷ்ணு, உருத்திரன். ஊர் - மோட்சமாகியஊர். ஆறு-வழி. --

(விளக்கம்) ஏனைய தேவர்கள் இறைவனுக்கு அடக்கம் ஆதலின், அவன் அன்றி அமரர் இல்லை எனப்பட்டது. பிரம்மா, விஷ்ணு, உருத்திரர், முறையே, படைத்தல் காத்தல், அழித்தல் என்னும் தொழிலை மேற்கொண்டவர்கள். இத்தொழிலைச் செய்ய ஆற்றல் ஈந்தவன் பரமசிவம். ஆதலில், அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்றும் இல்லை. உருத்திர மூர்த்தி சிவபெருமான் அல்லன். அவன் மும்மூர்த்திகளில் அழிக்கும் தொழில் புரியும் ஒரு மூர்த்தி.

சிவபெருமான் தாயினும் அன்புடையன். பிள்ளையினும் கல்லவன் 4. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறி வார் இல்லை சேயினும் கல்லன் அணியன்கல் அன்பர்க்குத் தாயினும் கல்லன் தாழ்சடை யோனே. (இ - ள்) தாழ்ந்த சடையுடைய சிவபெருமான் நெருப் பைக் காட்டிலும் வெம்மையானவன். நீரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையவன். இங்ங்ணம் இருப்பதை அறிந்தும், அவனது பேரருள் திறத்தை உணர்பவர் இல்லையே. பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் நல்லவன். அன்பர்களின்