பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹

போற்றற்கும் பாராட்டற்கும் உரியது. இவ்வுரை சாலச் சிறந்ததாகும். மந்திரத்தைப் புரிந்துகொள்ள இயலாது திகைப்புக் கொள்ளும் மக்களுக்கு இவ்வுரை ஒரு பெருந்துணை யாகும் எனில் அது மிகையாது. ஒரு சிலர் தமிழில் மந்திர நூற்கள் இல்லை ஒன்று கூறும் கூற்றுக்கு இந் நூல் "இதோ உளது' என்று எடுத்துக் கூறுதற்கு ஏற்ற சான்முக அமைந் துளது. இத் தமிழ் மந்திர நூலில் எல்லாச் செய்திகளையும் கருத்துக்களையும் தெள்ளதெளியக் காணலாம்.

கொள்கை, மேன்மை, கட்டுரை வன்மை, கலையில் தெளிவு முதலான உயர்வு அமைவுகளுடன் அன்பு, அறிவு , பண்பு, அடக்கம், சீலம் முதலான சிறந்த குணச் செல்வங் களுடன், எழுதும் வன்மையும் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவர்: திரு ஈங்கோய் மலை எழுபது உரை, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பெருவிளக்க உரை, திரு வெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி முதலான உரைகளையும், பொய்யடி ை இல்லாத புலவர் யார் என்னும் ஆராய்ச்சி நூலையும் எழுதியவர்: தமிழ் நூல் வரலாறு என்னும் இலக்கண இலக்கிய வாலாற்று நூலையும் எழுதிப் பேரறிவு படைத்த பெருமக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர்; இத்தகைய பேரறிவும் பேராற்றலும் படைத்த திரு. முதலியார் தமிழ் மந்திரத்திற்கும் உரை கண்டனர் எனில், அவ்வுரை நூலின் மாண்பைச் சொல்லவும் வேண்டுமோ? இதுபோன்ற ஏனைய அரிய பெரிய நூல் களுக்கும் உரையியற்றியருள எல்லாம் வல்ல முழுமுதற் பரம் பொருள் அறிவு, ஆற்றல், ஊக்கம், பொருள்வளம், நீடிய ஆயுள் இனிதருள்வதாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/12&oldid=571189" இலிருந்து மீள்விக்கப்பட்டது