பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

zos

(அ - சொ) இருவர் - காதலன் காதலி. முன்பு:உற மேலாக இருக்க. தொன்பு - பழைமை. தாடி- ஆராய்ந்து. ஒதல் - ஐந்தெழுத்தைக் கூறல்.

(விளக்கம்) நிலத்தில் தோன்றியஉயிர்கள் பாசபந்தத்தில் கட்டுண்டு துன்புற்றுலும், அத்துன்பத்தின்று நீங்கி நற்கதி அடைய வழி உண்டு. அதுவே பஞ்சாட்சர மந்திரத்தை ஒதல் ஆகும். அதாவது சிவாய நம: என ஒதல்.

தாய் கருவில் உள்ள குழந்தையை

வளர்க்கும் முறை

134. குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லை போக்கில்லை ஏன்என்பதில்லை மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

(இ - ள்) குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால், காக்கை சிறிதும் சந்தேகம் கொள்ளாது அம் முட்டையினை அடைகாத்துத் தன் குஞ்சைப்போலவே வளர்க்கும். அதுபோல் தாயும் போகமயக்கத்தால் இயங்காமலும், போக்கு இல்லாமலும், ஏன் என்று கேட்கா மலும், கருவில் உள்ள சரீரத்தைக் காக்கின்ருள்.

(அ - சொ) அயிர்ப்பு - சந்தேகம். இயக்கு நடமாட்டம். போக்கு - இழப்பு.

(விளக்கம்) காக்கை, குயிலின் முட்டையைப் பார்த்த போது, தன் முட்டை என்றே எண்ணுகிறது. தன் முட்டையை அடைகாப்பது போலவே குயில் முட்டையையும் காக்கிறது. குஞ்சான போதும் இரைகொடுத்துக் காக்கிறது. தாயும் தன் வயிற்றில் உள்ள குழந்தையைத் தன்னை அறியாமலே காத்து வருகின்ருள் என்பதாம்.