பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

29%

(இ - ள்).மீன் ராசிகள் ஆழமான நீர் நிலைகளில் வாழ்ந்து பழகிலுைம், புதுநீர் வெள்ளத்தை அடையவே விருப்பம் கொள்ளும். அம்மீன்களைப் போலவே உள்ளத் துறவுடைய உத்தமர்கள். இல்லறத்தில் ஈடுபட்டுத் தேன் ஒழுகும் மலர்களை அணிந்த மாதர்களுடன் மன்மதனது தொழிலாகிய இன்பத்தில் ஈடுபட்டிருந்தாலும், இறைவன் மீது நாட்டம் கொண்டு, அவன்மீது வைத்த மனத்தை மாற்ருராகி வாழ்வர். -

(அ - சொ) கள் - தேன். கோதையர் - மலர்மாலே அணிந்த பெண்கள். காமன் - மன்மதன். ஒருவன் - ஒப்பற்ற இறைவன்.

(விளக்கம்) தவம் என்றதும் எல்லாம் விட்டுக் காட்டுக்கு ஒடி அங்குத்தான் சென்று தவம் புரியவேண்டும் என்பது இல்லை. இல்லறத்தில் இருந்துகொண்டு தம் கடமைகளைத் தவருது செய்துகொண்டு மனைவி மக்களோடு இன்புற்று இருக்கலாம். ஆனல் அம் மனைவி மக்கள் இன்பத்திலேயே அழுத்திவிடாமல் இறைவன் மீது தம் உள்ளத்தை வைத்து அவனையும் கண்டு கெர்ண்டே இருக்க வேண்டும். இது குறித்தே மீன் இனத்தை உவமை காட்டினர். உள்நோக்கம் வேண்டும் 265. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்

மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தஅப் பார்வை பசுமரத் தானிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. (இ - ள்) மக்களே, சாத்திரம் சாத்திரம் என்று கூறி அதனை ஒதிப் பெருமையடையும் மக்களை விட்டு நீங்கி, நீங்கள் கண் இமை கொட்டும் சிறு அளவேனும் வெளி முகமாகச் சஞ்சரிக்கும் அறிவைத் தடுத்து உங்கள் உள்ளத் தையே உற்று நோக்குங்கள். அங்ங்ணம் உள்ளத்துள்ளே இருக்கின்ற இறைவனைப் பார்த்த அந்த முகப்பார்வுை