பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயர்ந்த மருந்து

ஞாயிற்றின் தோற்றம்
கடலின் அலை
வாணத்தின் வண்ணம்
திங்களின் ஒளி
மலையின் உச்சி
அருவியின் வீழ்ச்சி
டியின் பசுமை
மலரின் வனப்பு

முதலியவைகளைப் பார்; அவற்றை உற்று நோக்கு; அதன் இயற்கை அழகுகளையெல்லாம் அள்ளிப் பருகு. அதனால் உனக்கு மகிழ்ச்சி தோன்றும். அதைவிட உன் கொடிய உள்ளத்தைத் திருத்தி, பண்படுத்தும் மருந்து இவ்வுலகில் எதுவும் இல்லை.

எச்சரிக்கை

சீசாவைத் திறந்ததும் முகர்ந்து பாராதே! அதில் நஞ்சு மருந்து இல்லை; நஞ்சு மருந்து இருந்த சீசாவும் அதுவல்ல. ஆனால், அதில் நெடுநாளாக அடைப்பட்டு இருக்கிற காற்று நஞ்சாக இருக்கிறது. மக்களின் உடல் நலத்தைக் கெடுப்பதற்கு இந்த நஞ்சுக் காற்றே போதுமானது. ஆகவே எச்சரிக்கையாக இரு உன் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் இதைச் சொல்லிவை.

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி என்பது ஒருவகைக் கீரையின் பெயர். அதை அருந்தினால் உடல் "பொன்னாம் காண் நீ" என்பது கருத்து. தனியாகவும் பருப்புடனும், சமைத் துண்ணலாம். வாய்க்கும் உருசியானது. 12 நாள் தொடர்ச்சியாகச் சாப்பிடப் பலன் அதிகமாகத் தெரியும். எப்போதும் சாப்பிட்டு உடம்பை, இரும்பாக்குங்கள். அது