பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

3 வெற்றிலையில் 2குண்டுமணி எடை கஸ்துரியை வைத்து உள்ளுக்குக் கொடுத்து விடவும். இதைவிடச் சிறந்த மருந்து எதுவுமில்லை. பின்பு கடைகளிற் கேட்டு பிரசவ மருந்துகளை வாங்கிப் பச்சையாக அரைத்து 10 நாளும் கொடுக்கலாம். பிறகு, அதே மருந்துகளை வறுத்துச் சலித்து இலேகியமாக்கி 2 மாதம் கொடுக்கலாம்.

பிள்ளை பெற்றபின் கழிச்சலுக்கு

ஊறின இளநீர் மட்டையில் அரை வீசம்படி சாறு எடுத்து அரைக்காற்படி பசும்பால் விட்டு காசுக்கட்டி 1 1/4 வாராகனிடையும் பொடி செய்து அதில் போட்டுக் கலக்கிச் சாப்பிடவும். காலைப்பொழுது மட்டும் 3 நாள் மருந்து போதுமானது; பத்தியம்: காரம் கூடாது.

பிள்ளைப்பால் பெருக

ஆலம் விழுதுத் தளிரையும், ஆலின் விதையையும் அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொள்ளப் பெண்களுக்குப் பிள்ளைப் பால் பெருகும்.

பால் சுரக்க

கீழ்க்காய்நெல்லி வேரை அரைத்துப் பசும்பாலிற் கலந்து குடிக்க, பால் சுரக்கும். 4 நாள் சாப்பிடவும், பத்தியமில்லை.

பால் சுரப்பைத் தடுக்க

வாழைப்பிஞ்சை அரைத்து முலையில் பற்றுப் போடப் பால்சுரப்பது நிற்கும். அல்லது மல்லிகைப் பூவை நிறைய வைத்துக் கட்டினாலும் பால் சுரப்பது நின்று விடும்.

முலைக் குத்தலுக்கு

நீர்ப்பூரா இலை, ஈரவெங்காயம், ஆமணக்கு எண்ணெய் இம்மூன்றையும் கலந்து அரைத்துப் பற்றுப்போட குத்தல் உடனே நீங்கும்.