பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. பாரதியார்

  பாரதிதன் தங்காட்டின் மீது வைத்த
      பற்றிற்கோர் எடுத்துக்காட் டுரைப்பேன் கேளீர்! 
 "சீரியஎன் தமிழ்நாட்டுப் பெண்ணைத் தோற்கச்
    செய்யும் அழ குடையாள் இன் னெருத்தி யென்று 
  கூறிடினும் உளம்பொறுப்ப தில்லை” யென்று
    கூறினன் உயர்கவிஞன் அவனே யன்ருே ? 
  கூறியதும் வீறுதனை உளப்ப டுத்தும்
     கொள்கையின லன்ருேசெந் தமிழ்நாட் டாரே !
  உரிமையினை முழுமையுற அடைய வேண்டின்
      உணர்வடைய வேண்டுமிந்த காட்டு மக்கள் 
  சரியான உணர்வுபெற வேண்டு மென்ருல்
      சற்றேனும் மடமையச்சம் கூடா தன்ருே ?" 
  புரிந்துகொண்டான் பாரதிதான் அச்சந் தானே
      போக்கற்ற அடிமைநிலை சேர்க்கு மென்றே ! 
  வரிந்துகட்டிக் கொண்டடிமை நிலைமை போக்க
      வாழ்நாளைச் செலவிட்டான் புரட்சி வேந்தன்
 வாழ்நாளின் பாரதியை இழந்து விட்டோம
      வந்துவிட்டான் நம்முளமாம் மண்ட பத்தில் 
 வாழ்கின்றன் வீரத்தை வெற்றி தன்னை
     வாழ்வுரிமை யத்தனையும் அடைந்த நெஞ்சில் 
 வாழ்கின்றன் ! அவன் உயர்வை எண்ணி யெண்ணி 
     மகிழ்கின்ற பெருமக்கள் உள்ளங் தன்னில் 
  வாழ்கின்றன் ! பாரதிதான் சாக வில்லை!
     வாழ்கின்றன்! வாழ்கின்ருன்! வாழ்க நன்றே !
                     一邮一