இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாரதிதாசன்
பாண்டிய நாட்டி லந்நாட்
- பைந்தமிழ்ப் புலவ ரெல்லாம்
மாண்டனர் என்றால் சங்க
- மாண்புநம் முன்னே தோன்றும்
மீண்டவர் வந்தா ரென்று
- விளம்பிடப் பாட லேக்கை
யாண்டவன் புகழைப் பெற்றோன்
- பாரதி தாச னன்றோ ?
மிகுத்திடு மூடத் தன்மை
- மேவிடும் சாதித் தீமை
நகத்தகுஞ் சமயக் கொள்கை
- நாட்டினின் றோட்டத் தானே
தொகுத்ததன் நூலி லெல்லாம்
- தூண்டினான் விளக்க மென்னும்
பகுத்தறி வியக்கந் தன்னைப்
- பாரதி தாச னன்றோ?
நாட்டினில் மூடக் கொள்கை
- நாட்டித்தம் வாழ்வை யின்பத்
தோட்டமாய் அமைத்துக் கொள்ளத்
- தோன்றிய கயவ ரெல்லாம்
ஏட்டினை மூட்டை கட்டி
- எடுத்தனர் ஓட்ட மென்னப்
பாட்டினை முழக்கு கின்றோன் பாரதி தாச னன்றோ?</poem> 3