பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதிதாசன்

பாண்டிய நாட்டி லந்நாட்

பைந்தமிழ்ப் புலவ ரெல்லாம்

மாண்டனர் என்றால் சங்க

மாண்புநம் முன்னே தோன்றும்

மீண்டவர் வந்தா ரென்று

விளம்பிடப் பாட லேக்கை

யாண்டவன் புகழைப் பெற்றோன்

பாரதி தாச னன்றோ ?


மிகுத்திடு மூடத் தன்மை

மேவிடும் சாதித் தீமை

நகத்தகுஞ் சமயக் கொள்கை

நாட்டினின் றோட்டத் தானே

தொகுத்ததன் நூலி லெல்லாம்

தூண்டினான் விளக்க மென்னும்

பகுத்தறி வியக்கந் தன்னைப்

பாரதி தாச னன்றோ?


நாட்டினில் மூடக் கொள்கை

நாட்டித்தம் வாழ்வை யின்பத்

தோட்டமாய் அமைத்துக் கொள்ளத்

தோன்றிய கயவ ரெல்லாம்

ஏட்டினை மூட்டை கட்டி

எடுத்தனர் ஓட்ட மென்னப்

பாட்டினை முழக்கு கின்றோன் பாரதி தாச னன்றோ?</poem> 3