பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாரதிதாசன்


ஓளிந்தொரு கூட்டம் நம்மை
        ஒழித்திடச் செய்யும் சூழ்ச்சி
தெளிந்திடச் செய்தான் ! நன்மை
        திகழ்ந்திடச் செய்தான்! முன்னர்
இழந்தநம் வீரப் பண்பை
        ஏற்றிடச் செய்தான்! மீண்டும்
பழந்தமிழ் வாழ்வைச் சேர்த்தான்
        பாரதி தாச னன்றோ?

வறுமையைக் களைந்து நல்ல
        வாழ்வினை நடத்து தற்கும்.
சிறுமையைப் போக்கி நல்ல
        சிறப்பினை எய்து தற்கும்,
பொறுமையை நீக்கி நாடடுப்
        பொறுப்பினை ஏற்ப தற்கும்,
திறமையை யுணர்ச்சி தன்னைச்

        சேர்த்திடும் தாசன் பாட்டே !