இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மறைமலையடிகளை மறந்திடாதே!
இனித்திருக்கும் செந்தமிழில் வடமொ ழிக்கேன்
இடங்கொடுத்துத் தமிழ்ச்சுவையைக் கெடுக்க - வேண்டும் தனித்திருக்கும் வன்மையுள்ள தமிழி ைேடு
தகுதியிலாப் பிறமொழிச்சொல் கலக்க வேண்டாம் எனத்திருவாய் மலர்ந்தவர்யார் ? இசைத்த வண்ணம் - இலக்கியங்கள் தூய்தமிழில் ஆக்கி வைத்து தனித்தமிழின் கலங்காத்தார் மறைம லையார்
தமிழ்மகனே அவர்பெருமை மறந்தி டாதே!
பலமொழியும் கற்றறிந்தார்; தமிழிற் சேர்ந்த
பண்பாட்டை யுணர்ந்திட்டார்; இனிமை கண்டார்: உலகமொழி அனைத்தும்வந் தெதிர்கின் ருலும்
ஒருதமிழ்ச்சொற் கீடாகா தென்ற றிந்தார்; விலகுகவே விலகுகவே என்று கூறி
வேற்றுமொழிச் சொல்களைந்து தமிழில் நூற்கள் பலதந்து தமிழ்காத்தார் மறைம லையார் : r பழந்தமிழா அவர்கினேவை மறந்தி டாதே !