இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Xxxlarge/மறைமலையடிகளை மறந்திடாதே!/
இனித்திருக்கும் செந்தமிழில் வடமொ ழிக்கேன்
- இடங்கொடுத்துத்:தமிழ்ச்சுவையைக்:கெடுக்க -
வேண்டும்
தனித்திருக்கும் வன்மையுள்ள தமிழி னோடு
- தகுதியிலாப் பிறமொழிச்சொல் கலக்க வேண்டாம்
எனத்திருவாய் மலர்ந்தவர்யார் ? இசைத்த வண்ணம் -
- இலக்கியங்கள் தூய்தமிழில் ஆக்கி வைத்து
தனித்தமிழின் கலங்காத்தார் மறைம லையார்
- தமிழ்மகனே அவர்பெருமை மறந்தி டாதே!
பலமொழியும் கற்றறிந்தார்; தமிழிற் சேர்ந்த
- பண்பாட்டை யுணர்ந்திட்டார்; இனிமை கண்டார்:
உலகமொழி அனைத்தும்வந் தெதிர்கின் ருலும்
- ஒருதமிழ்ச்சொற் கீடாகா தென்ற றிந்தார்;
விலகுகவே விலகுகவே என்று கூறி
- வேற்றுமொழிச் சொல்களைந்து தமிழில் நூற்கள்
பலதந்து தமிழ்காத்தார் மறைம லையார் :
- பழந்தமிழா அவர்கினேவை மறந்தி டாதே !