பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Xxxlarge/மறைமலையடிகளை மறந்திடாதே!/

 இனித்திருக்கும் செந்தமிழில் வடமொ ழிக்கேன்

இடங்கொடுத்துத்:தமிழ்ச்சுவையைக்:கெடுக்க -
                                 வேண்டும் 

தனித்திருக்கும் வன்மையுள்ள தமிழி னோடு

தகுதியிலாப் பிறமொழிச்சொல் கலக்க வேண்டாம்

எனத்திருவாய் மலர்ந்தவர்யார் ? இசைத்த வண்ணம் -

இலக்கியங்கள் தூய்தமிழில் ஆக்கி வைத்து

தனித்தமிழின் கலங்காத்தார் மறைம லையார்

தமிழ்மகனே அவர்பெருமை மறந்தி டாதே!


பலமொழியும் கற்றறிந்தார்; தமிழிற் சேர்ந்த

பண்பாட்டை யுணர்ந்திட்டார்; இனிமை கண்டார்:

உலகமொழி அனைத்தும்வந் தெதிர்கின் ருலும்

ஒருதமிழ்ச்சொற் கீடாகா தென்ற றிந்தார்;

விலகுகவே விலகுகவே என்று கூறி

வேற்றுமொழிச் சொல்களைந்து தமிழில் நூற்கள்

பலதந்து தமிழ்காத்தார் மறைம லையார் :

பழந்தமிழா அவர்கினேவை மறந்தி டாதே !