பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

வல்லிக்கண்ணன்

”இந்தக் கதையைப் போல் யாமும் முன்னோர் கைக் கொண்ட முறைகளைப் பின்பற்றியே வந்துள்ளோம். அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தாற் பொய்யா தொழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?” என்று கூறித் தம் உள்ளக் கருத்தினைத் தெளிவு படுத்தினார்கள்.

“இந்நிகழ்ச்சி 1913 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அதன் பின் கவாமிகள் பல பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவிகை பூர்ந்தே, எங்கெங்கும் செல்வார்கள். சென்னைக்கும் பலமுறை சென்று மீண்டதும் உண்டு. அதனால், சிறு கிராம மக்களும் சுவாமிகளைக் காணவும், அவர்கள் பால் ஈடுபாடு கொள்ளவும், சில சில கிராமங்களில் மக்கள் அவர்களது சொற்பெருக்கைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தன. திரு.வி.க. முதலாயினோர் தம் வேண்டுகோளின் படி சுவாமிகள் கார் மூலம் செல்வதை மேற் கொண்டிருந்தால் சிற்றூர் மக்கள் பலர் அவர்களைக் காண்டலும், அவர் அருள் மொழிகளைக் கேட்டலுமாகிய வாய்ப்புக்களை இழந்திருப்பார்களே என அமைதியுற்றனர்.

தாம் கொண்ட உறுதியினின்றும் மாறாதொழுகினார்கள் நம் அடிகளார் என்பதனைத் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் அவர்களே எழுதியிருப்பதையும் இங்குக் குறிப்படுவாம்.

‘ஞானியார் மடத்தலைமையும், சிவிகையூர்தலும் இன்ன பிறவும் சுவாமிகளே வெளியூர் செல்லாதவாறு தகைந்துவந்தன. அவைகள், சுவாமிகளைச் சிறைப் படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன்.

1941 ஆம் ஆண்டு அன்பர் இராமசாமி நாயுடு என்பவர் தென்னாப்பிரிக்காவினின்றுஞ் சென்னை போந்தனர். அவர், சுவாமிகளையும் என்னையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். சுவாமிகளைக் கண்டோம். நாயுடு சுவாமிகளிடம் தமது கருத்தைத் தெரிவித்தனர். ‘எனக்குள்ள தடைகளை முதலியாரவர்கள் சொல்வர் என்ற பதில் சுவாமிகளிடத்திருந்து நகைப்புடன் பிறந்தது. காஞ்சியில் கண்ட அந்நகை முகக் காட்சியே இறுதியாயிற்று

இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கு மிடையே சற்றேறக் குறைய முப்பதாண்டுகள் இரண்டிலும் திரு.வி.க. அவர்கள்