பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

143


8. திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபை :

சித்தார்த்தி ஆண்டு ஆனி மாதம் 21-ஆம் தேதி திருச்சி சித்தாந்த சபையின் ஆண்டு விழா நடைபெற்றது. சுவாமிகள் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்தித்தந்தார்கள். சுவாமிகள் திருச்சி சென்றருளியபோ தெல்லாம், அவர்கள் சுவாமிகளின் சொல்லமுத மாந்திப் பயன் பெற்றனர்.

9. கரந்தைத் தமிழ்ச் சங்கம் :

முன் கூறப்பெற்றவாறு, 1911ல் நிறுவப் பெற்ற அச் சங்கத்தின் 7, 8 ஆண்டு விழாக்களிலும் 1938-ல் அதன் வெள்ளி விழாவிலும் நம் சுவாமிகள் பங்கேற்றுத்தலைமை தாங்கினார்கள். தலைவர் திரு. த. வே. உமாமகேசுவரம் பிள்ளைக்குத் தமிழ வேள் என்றும், செந்தமிழ்ப் புரவலர் என்றும் சிறப்புப் பெயர்களைச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். புலவர் இரா. வேங்கடாசலம் பிள்ளைக்குக் கவியரசு என்ற சிறப்புப் பெயர் சூட்டிப் பாராட்டினார்கள். அவர்கள் அன்பால் அளித்த சிவிகையை மகிழ்ந்தேற்றார்கள்.

10. பலவான்குடி மணிவாசக மன்றம் :

சித்தார்த்தி, ஆவணி 20உ நடைபெற்ற பலவான்குடி மணிவாசக மன்றத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்று யாவரும் மகிழச் சொன்மாரி பொழிந்தார்கள்.

11. புதுவை வாணிவிலாச சபை.
12. வண்டிப்பாளையம் சந்திரசேகர பக்த ஜன சபை
13. துத்துக்குடி சைவ சிந்தாந்த சபை.
14. பழநிச் சைவ சிந்தாந்த சபை.
15. கோவல் மணம்பூண்டி அருட்சோதிநாத பக்த பால சபை.
16. நெல்லிக்குப்பம் - சோழவல்லி வாகீச பக்த ஜன சபை.
17. ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபரன் சங்கம்.
18. செங்கற்பட்டு - சமயாபி விருத்தி சங்கம்.
19. காவித்தண்டலம் - சைவ சித்தாந்த சபை.
20. கூடலூர் சைவ - சிந்தாந்த சபை.
21. திருவோத்துர் - பானுகவி மாணவர் கழகம்.

எண்ணிறந்த சங்கங்கள் சுவாமிகளின் சொல்லமுதை மாந்திய செய்திகள் இருக்கக்கூடும். அவை இன்னவையென அறியக்கூட வில்லை.