பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வல்லிக்கண்ணன்

சுவாமிகளிடம் பேரன்பு பூண்ட செல்வர் சிலர்

திரு. ஸர். பி. டி. ராஜன் அவர்கள், மதுரை
"T.M. நாராயணசாமி பிள்ளை அவர்கள், திருச்சி
"T. M. ஜம்புலிங்க முதலியார்.அவர்கள், திருக்கண்டேசுவரம்
"T.M. பழநிசாமி முதலியார், திருக்கண்டேசுவரம்
"ப.க. பழநியாண்டி முதலியார் " முருகேசநகர்
"வெ. க. மாணிக்க முதலியார் " "
"T.M.தம்புசாமிநாயுடு " திருத்தினை நகர்
"கிரந்தே - சிவசச்சிதா நத்த செட்டியார் அவர்கள், புதுவை
"பங்காரு பத்தரவர்கள் "
"முனிசாமிப்பிள்ளை அவர்கள், பூரணாங்குப்பம்
"இராஜகோபால் செட்டியார்.அவர்கள், பண்ணுருட்டி
"சின்னசாமி ரெட்டியார், திருவெண்ணெய் நல்லூர்
"நெ. சு. பொன்னுசாமி உடையார்அவர்கள் நெற்குன்றம்
"மாசி உடையார் அவர்கள், சிறுமதுரை
"T. V. ஆதிசேஷ முதலியார் அவர்கள் சென்னை
"T. P. இராமசாமிப்பிள்ளை " "
(திருவொற்றியூரானடிமை)
"சிம்புமல் செளகார் ""
முதலாயினோர்.

முடிவுரை : - சுவாமிகள் தமிழ்மொழியினிடம் அடங்காப் பற்றுக் கொண்டமையே இவ்வளவு அருந்தொண்டுகட்குக் காரணமாயின. மொழியின்றிச் சமயம் இல்லை. உலகெங்கும் சைவ சமயமே கடைப்பிடிக்கப் பெற்றிருந்திருக்க வேண்டு மென்பது அடிகளார் கொள்கை. அந்தப் பழஞ் சமயத்தோடு ஒன்றியுள்ளதே வைணவம். அவ்விரு சமயங்களும் இந்து மதத்தின் இருகண்களாம் எனச் சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

தாம் வீரசைவரே யாயினும் வைணவத் தொடர்பாகச் சொற் பெருக் காற்றுங்கால் அவர்களைச் சைவசமயி என எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். திருவரங்கத்திலும், திருவகீந்திர புரத்திலும் அடிகளார் பாராட்டப் பெற்றமையே இதற்குச் சான்று.