பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

15

செல்வர்களும் தமிழை தழைப்பிக்க வேண்டும் என்று அடிகள் எடுத்துக் கூறுவது வழக்கம்.

அடிகளின் ஆலோசனையின்படி தான் பாலவநத்தம் ஜமீன்தாரர் ஆன பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவினார்கள். 1901ல் இது நிகழ்ந்தது. அதன் அங்கமாக சேதுபதி கலாசாலை அமைக்கப்பட்டது. அங்கு தமிழ் கற்க வந்த மாணவர்களுக்கு உண்டியும் உறைவிடமும் இலவசமாகவே வழங்கப்பெற்றன. ‘செந்தமிழ்’ எனும் மாத இதழும் சங்கத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

ஞானியாரடிகள் தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காகத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். விரும்பி வந்தோர்க்கெல்லாம் தமிழ் மொழியை போதித்தார்கள். அதற்கென வாணிவிலாச சபை என்ற சங்கத்தை அமைத்தார்கள். அடிகள் தாமேசொற்பொழிவுகள் ஆற்றுவதுடன், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்து, அவர்கள் முன்னுரை முடிவுரைகள. பேசிச் சொல் விருந்து அளித்தார்கள். அடிகளின் சொல்லமுதம் அமுதத்தினும் இனியதாய், நெஞ்சைவிட்டு நீங்காதனவாய், உள்மாக கழுவும் உயர்நீர்மையினதாய் இருந்ததை அனுபவித்தவர்கள் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

பல திறத்தினரும், பற்பல நிலையினரும் (செல்வர், வறியர், சிறியர், பெரியர், இல்லறத்தினர், துறவறத்தினர், சிறிது கற்றோர், கல்வியறிவற்றோர், தொழில் புரிவோர், அரசாங்க உத்தியோகம்புரிவோர், உழுதுண்போர், உழுவித்து உண்போர்) மடாலயத்தில் பாடம் கற்றுப்பயன் பெற்றனர். துறவற நெறிநின் றோரும், நிற்கச் சாதனை புரிவோரும் கூட அடிகளாரை அணுகிக் கல்வி பயின்றனர். உண்டி உறையுள் பெற்று, கல்வியும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்றனர். அவர்கள் பலப்பல இடங்களுக்கும் சென்று தமிழ்ப்பணி, தெய்வப் பணிகளில் ஈடுபட்டார்கள். வெவ்வேறு இடங்களில் சங்கம் அமையச் சிலர் காரணமாயினர். இவ்வாறாக ஞானியாரடிகள் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றி வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார்கள்.

கிராமக் கோயில்களில் உயிர்கள் பலியிடப் பெறுவதை அறவே விட்டுவிடவேண்டும் என்று ஞானியாரடிகள் வலி