பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

201


சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.

மடாலய வரன்முறை

முதற் குருமூர்த்திகள் : (மடாலயம் நிறுவியவர்கள்)

ஸ்ரீலஸ்ரீ - ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் தோற்றம், கலி 4774, ஆநந்த ஆண்டு, கார்த்திகை கிருத்திகை மாலை திருவிளக்கிடு நேரம்.

திருவருள் நிலையிலிருந்த காலம் : 97 ஆண்டுகள்
திருவருட் கலப்பு : கலி 4870, விகுர்தி மாசி 27௳ வியாழன்
இயற்றிய நூல்கள் : நிட்டானுபூதிசார முதலாம் 31 நூல்கள் . 1146 பாடல்கள்
இரண்டாங் குருமூர்த்திகள் : (சண்முக ஞானியார்)
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப்பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4870 விகுர்தி, மாசி 27 அநுடம் வியாழன்
அருளாட்சி : 63 ஆண்டுகள்.
திருவருட்கலப்பு : கலி 4933 நந்தன , கார்த்திகை, அசுவினி மூன்றாம் செவ்வாய்,
இயற்றிய நூல்கள் : விநாயகர் மாலை, முருகரந் தாதி முதலாம் 7 நூல்களும் 401 பாடல்களும் அறியக் கூடியன.