பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

52

ஞானியாரடிகள் கூறுகிறார்.

"அத்வைதம் எனும் சொல்லுக்கு வடமொழி நூல் ஆறுவித பொருள்களைக் கூறுகிறது. ஈண்டு வேண்டற்பாலன மூன்று பொருள்கள். அவை அன்மை, இன்மை, மறுதலையாகும். ஆதிசங்கரர் அதை இன்மைப் பொருளில் கொண்டார். மெய்கண்டார் அன்மைப் பொருளில் வழங்குகின்றார். கடவுளுக்கும் உயிருக்குமுள்ள அத்வைத சம்பந்தத்தை மெய்கண்டார் விளக்கும் முறையே சிறந்ததொன்றாகும் என்று கூறிவிட்டு ஞானியாரடிகள் அதனை புணர்ச்சி இலக்கணத்தால் விளக்குகிறார்.

"தான் தலை என்ற இரண்டு வேறுபட்ட சொற்கள் புணரும் போது தாடலை என்றாகிறது. இங்கு ‘ட’ கரம் ஒரு எழுத்தன்று. இரண்டு எழுத்துகள் ஒன்று சேர்ந்து ஒன்றாகாமலும் இரண்டும் அல்லாமலும் நிற்கிறது. இதைப்போல் கடவுள், உயிர் ஆகிய இரண்டு வேறுபட்ட பொருள்கள் ஒன்று கூடும் போது ஒன்றாகாததும் இரண்டல்லாமையுமாகிய நிலையை எய்துகின்றன. இதுவே மெய்கண்டார் கூறும் அத்வைதமாம்”.

ஞானியாரடிகள் புணர்ச்சி இலக்கணத்தின் மூலம் சமய மெய்யியலை விளக்கும் பாங்கு வெகு சிறப்பானது ஆகும்.

இங்கே நாம் பார்க்க வேண்டியது சமயத்தை தமிழோடு - மொழியோடு-தாய்மொழியோடு இணைத்துக் காட்டும் விதமே தமிழ்த் தேசியத்தின் சமய மெய்யியல் வழியான அடையாளமாகும். தமிழ் என்கிற மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டு வள்ளலார் எழுதிய சமய மெய்யியலின் சாரமே ஞானியாரடிகளின் புணர்ச்சி இலக்கண எடுத்துக்காட்டைக் காட்டுவதன் மூலம் என் நினைவுக்கு வருகிறது.

இதையடுத்து ஞானியாரடிகள் சொற்களின் பயன் பாட்டைக் பற்றி மிகத் துல்லியமான கவனத்தைச் - செலுத்தியவராக இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டிற்காகச் சிலவற்றை கூறுகின்றேன்.

1. தோள் என்றால் தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை.என்று பொருள்.

2. உட்காருங்கள்; உட்காருதல் என்றெல்லாம் நம் பேச்சில், வழங்குகிறோம். இவற்றிற்கு தமிழில் வழக்கு இல்லை. ஆதாரமும் பொருளும் இல்லை. நிற்றல், இருத்தல், இருந்தான் என்பது அமர்ந்திருத்தல், அமர்தல், வீற்றிருத்தல் என்ற சொற்களும் சரியானவை.