பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

57

ஞானியாரடிகளாரை வேண்டுமானால் அரசியல் தலைவர்கள் வந்து பார்த்து சென்றிருக்கலாமே ஒழிய இவர் யாரையும் சென்று பார்த்துப் பழகியதில்லை. தம்மைப் பார்க்க வருகிறவர்களிடம் இதைச் செய்யுங்கள்; அதைச் செய்யுங்கள் என வழிகாட்டுதலை ஞானியாரடிகள் வழங்கி இருக்கிறார்.

இன்று நம்மிடையே தமிழால் ஒன்றுபடுவோம்’ எனும் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. வெவ்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் கூட இம்முழக்கத்தை முன் வைக்கின்றன. அரசியலில் தமிழியச் சிந்னைகளே தோன்றாத காலகட்டத்தில் தமிழால் ஒன்றுபடுவோம்!“ என முழங்காமல் முழங்கி செயற்கரிய செய்தவர் ஞானியாரடிகள். சமயத்துறையில் இருந்த ஒருவர், மற்ற சைவாதீனத்தாரைக் காட்டிலும் செல்வம் குறைந்த நிலையை உடைய ஒருவர் மன உறுதி ஒன்றினால் மட்டுமே தமிழ் முழக்கம் எழுப்பி சாதனை புரிந்தார். சைவமும், தமிழும் இரு கண்களென உழைத்தார். அவ்வாறு அவர் தொண்டாற்றி செல்லும் பயணத்திலே மரிக்கவும் செய்தார்.

ஞானியாரடிகளைப் பற்றி பதிவுகளை ஆராய்ந்ததில் நமக்குக் கீழ்க்காணும் முடிவுகள் கிடைத்தன.

1. தம்மை ஒரு சைவ சமயீ எனக்கூட கருதாமல் பொதுவாகச் சமயத்தில் உள்ள கேடுபாடுகளைகளைந்து மக்களிடையே சமன்மையை உருவாக்க உழைத்தவர். அதற்கு மற்றவர்க்கு வழி காட்டியவர்.
2. மத நல்லிணக்கத்தைப் போற்றியவர்; நடைமுறைப் படுத்தியவர்.
3. அவர் அறியாமலேயே சமயத்தோடு தமிழ்த் தேசிய உணர்ச்சியை வளர்த்தெடுக்கதுண்டுகோலாக இருந்தவர்.
4. சமய ஞானமுடைய மற்றையோர்க்கு முன்மாதிரியாக இருப்பவர். எந்நிலையிலும் தாய்மொழி உணர்ச்சியை மறக்காதவர்.
6. உண்மை துறவியாய் இருந்தவர்.

ஞானியாரடிகள் மறைந்து 61 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்தத் தமிழ்க் குரல் இன்னும் ஒலிப்பதைக் கேட்கலாம். ஆம்; நீங்களும் அடிகளின் குரலை ஒலிப்பதைக் கேளுங்கள்.