பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வல்லிக்கண்ணன்

திருநீறிட்டு, ஆலய வழிபாடு முறையாகப் பொருளுணர்ந்து செய்து வருபவை எத்தனையாயிரம் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆனால் சுவாமிகளின் பேச்சிலும் செயலிலும் பிற மதத்தைப் பழித்தல் என்பது காண முடியாது. சமயம் நேர்ந்த போது, ஆண்டவன் ஒருவனே என்று கூறிப் பிறமத அடிப்படைத் தத்துவங்களையும் அவர் பயன்படுத்துவதுண்டு.

தமிழ் இலக்கியத்திலும் அவ்விதமே, நுனிப்புல் மேய்ந்து வந்த பண்டிதர்களிடையே இப்பெரியார் தம் சமயப் பேச்சுக்கள், உபதேசங்கள், இடையே கூறிய இலக்கிய நயங்கள் இலக்கண நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் உண்மையிலேயே பண்டிதராயனாரும், புலமைக்கான உண்மைப் பாதையிலே செல்லத் தொடங்கினாரும் எண்ணற்றவர். பாடம் படித்தோரைச் சொல்ல வேண்டுவதில்லை.

சுவாமிகளின் வடமொழிப் புலமையை அவர் பேச்சைக் கேட்போர் நன்கு உணர முடியும். தம் கருத்துக்கு அடிப்படையான வடமொழி வாக்கியங்களை அவர் எளிதாக எடுத்துக் கூறுவார். கூறும்போது, ஒவ்வொரு சொல்லையும் தனியே பிரித்துப்பொருள் கூறி, இலக்கணம் கூறி, பகுதி விகுதி போன்ற பாகுபாடுகளும் செய்துகாட்டி, தம் கருத்துக்கு அவ்வடமொழி வாக்கியங்கள் எவ்வாறு துணை வருகின்றன என்பதை விளக்கும்போது, அவருடைய படிப்பின் ஆழம் புலப்படும்.

சுவாமிகளின் பிரசங்கங்கள் மூன்று மணிக்கு மேலாகத் தான் எப்போதும் நடக்கும், படித்தவர் படியாதவர், இளைஞர் முதியவர், செல்வர், வறியவர், ஆடவர் பெண்டிர் குழந்தைகள் - அனைவரும் அவ்விடத்தில் இருப்பார்கள். பலதிறப்பட்ட மக்கள் கூடுகிற கூட்டத்தில் சிறிது சத்தம் இருத்தல் தவிர்க்க முடியாதது. தவிர 1934 போன்ற ஆண்டுகளில் சென்னையில் இப்போதுள்ள பஸ் வசதிகள் இல்லை. ஆகவே நெடுந்தெர்லைவிலிருந்தும் அவர்கள் பேச்சைக் கேட்கப் பல்லாயிர மக்கள் குழுமியிருப்பார்கள். இடையில் வீடு நோக்கித் திரும்பச் சித்தப்படுவோரும் இருப்பார்கள். இப்படியாகக் கூட்டத்தில் சத்தம் எழும்போது, ”நம: பார்வதி பதயே” என்று அவர்கள் ஒரு முழக்கம் செய்த மாத்திரத்தில், கடல் அலைபோல், ”அரஹர மஹா தேவா” என்ற எதிர் முழக்கம் எழும். சந்தடி பூரணமாய் ஓய்ந்து மீண்டும் அமைதியாகப் பேச்சு தொடர்ந்து நடைபெறும்.