பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வல்லிக்கண்ணன்

வெல்லுஞ்சொல் இதுவேயன் றறிந்து பேசி
வியப்பினிலே ஆழ்த்தியவர்; பிறையைப் போன்ற
பல்லக்கின் மீதேறி இந்த நாட்டிற்
பவனிவந்த திருநீற்றுச் சைவர்! பாராங்
கல்லொக்கும் நெஞ்சத்தார் தம்மைத் தேமாங்
கனியொக்கும் அறிவுரையால் கனியச் செய்தார்!
முல்லைப்பூ மாலைக்கோ பாராட் டுக்கோ
மூதறிஞர் மயங்கியதே இல்லை கண்டீர்!


இளந்திரையன் என்பானோ பெரும்போர் வீரன்;
இருண்டகடல் நீந்தியவன் வீரங்காட்டி
வளர்ந்தபுகழ் பெற்றுயர்ந்த வேந்தன் அந்த
மாவீரன் நம்மவர்நெப் போல்யன் ஆவான்!
தளர்ந்தசெயல் செய்தறியாப் புலியூர் ஞானி
தமிழகத்தின் சாலமனே யாவார் நுட்பம்
அளந்தமனம் கொண்டவராம்! அவர்போற் பேசும்
ஆற்றல் பெற்றார் இன்றிங்கே யாருமில்லை


நன்றி :
சுரதாவின் தேன்மழை