பக்கம்:தம்பியின் திறமை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


என்று மறுபடியும் நிதானமாகவே முள்ளெலி பதில் சொல்லிற்று.

முயலுக்கு மூக்கிற்குமேல் கோபம் வந்துவிட்டது. இந்த முள்ளெலியின் மண்டைக் கர்வத்தை ஒரு நொடியில் அடக்க வேண்டு மென்று தீர்மானித்துக்கொண்டு, 'சரி இப்பொழுதே இந்தயிடத்திலிருந்தே இந்தக் காட்டின் கோடி வரை ஒடலாம். முதலில் அங்கே போய்ச் சேர்வது நீயா நானு பார்க்கலாம்' என்றது.

"ஐயா, முயலாரே, நீ தன்ருகப் புல் மேய்ந்து விட்டீர். நான் இன்னும் உணவே தொடவில்லை. இந்தச் சமயத்தில் ஒட்டப் பந்தயத்திற்குக் கூப்பிடுவது சரியா? நான் வீட்டுக்குப் போய் உணவருந்திவிட்டு இரண்டு நாழிகையில் இந்த இடத் திற்கே வருகிறேன். நீர் இங்கேயே புல் மேய்ந்துகொண்டிரும். நான் வந்தவுடனே பந்தயம் தொடங்கலாம்' என்றது முள் ளெலி. முயல் இதற்கு ஒப்புக்கொண்டது.

முள்ளெலி வீட்டிற்குப் புறப்பட்டது. அங்கு சென்றதும் தன் மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிற்று. நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். இப்பொழுது என் னுடன் கூடவா" என்றது முள்ளெலி. அதன் மனைவியும் உடனே சம்மதித்துப் புறப்பட்டது. இரண்டும் சேர்ந்து கொண்டு, ஒட்டப் பந்தயம் எந்த இடத்தில் போய் முடிவ தென்று தீர்மானிக்கப் பட்டுள்ளதோ அந்த இடத்திற்கு அவசர அவசரமாகச் சென்றன. அங்கே போய்ச் சேர்ந்ததும் ஆண் எலி தன் மனைவியைப் பார்த்து, "நீ இந்த இடத்திலேயே தங்கி இரு முயல் வேகமாக இந்த இடத்தை நோக்கி வரும் போது, நீ அதைப் பார்த்து என்ன முயலாரே இவ்வளவு நேரமாயிற்ரு உமக்கு? நான் வந்து வெகுநேரமாகிறதே? என்று சொல்' என்று கூறிற்று. இப்படித் தந்திரம் சொல்லிக் கொடுத்துவிட்டு முயலைத் தேடிக்கொண்டு அது சென்றது. பெண் எலி குதுகலத்தோடு அங்கேயே தங்கிற்று.